Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்கள் மனம் கல்லா? ஒருத்தரும் காப்பாத்தல.. வீடியோ தான் எடுத்தாங்க.. ப்ரீத்தியின் சகோதரர் கண்ணீர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கொள்ளையர்கள் செல்போன் பறித்த போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி பிரீத்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி அடிபட்டு கிடந்த போது யாரும் காப்பாற்ற வரவில்லை என்று தனது ஆதங்கத்தை மாணவியின் சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார்.

சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கடந்த 2 ஆம் ஆம் தேதி பயணம் செய்து கொண்டு இருந்த கல்லூரி மாணவி பீர்த்தியிடம் கொள்ளையர்கள் செல்போனை பறித்தனர். அப்போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு கடந்த ஒரு வார காலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

 No one came to save my younger sister after he fell from train - Brother of preethi anguish

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் ரயில்வே போலீசார், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பழைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் பெயர்களையும் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் சென்னை பட்டினப்பாகத்தை சேர்ந்த விக்னேஷ், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்கள் இருவரும் தான் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து மாணவியின் செல்போனும் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையத்தில் கடந்த 2 ஆம் தேதி கொள்ளையர்கள் செல்போன் பறித்த போது ரயிலில் இருந்து விழுந்த மாணவி பிரீத்தி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரீத்தி அடிபட்டு கிடந்த போது யாரும் காப்பாற்ற வரவில்லை என்று தனது ஆதங்கத்தை மாணவியின் சகோதரர் வெளிப்படுத்தியுள்ளார்.

 No one came to save my younger sister after he fell from train - Brother of preethi anguish

வீடியோ தான் எடுத்தாங்க: பெண்ணின் சகோதர் குபேந்திரன் கூறும் போது, "எனது தங்கை கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கிடந்துள்ளார். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர் உயிருக்கு போராடிய போதும் மக்கள் வீடியோ எடுத்து சென்றார்களே தவிர காப்பாற்ற வரவில்லை. என் கோபம் குற்றவாளிகளை விட இவர்கள் மீதுதான் உள்ளது. வேடிக்கை பார்தவர்களின் வீட்டு பெண் என்றால் அவர்கள் இப்படி செயல்படுவார்களா? மக்கள் மனது ஏன் இப்படி கல்லாக மாறிவிட்டது.

ரயில் நிலையங்களில் கேமரா இல்லை. ரயில் நிலையத்திற்கு வெளியே ஒரு கேமரா இருந்தால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்து இருக்காது. என் தங்கை அடிபட்டு ஒருவாரம் ஆகிய பிறகு இப்போதுதான் குற்றவாளியை பிடித்து இருக்கிறார்கள்" என்றார். ஆட்டோ ஓட்டுநரான மாணவி பிரீத்தியின் தந்தை கூறுகையில், " என் பொண்ணுக்கு நடந்தது போல வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.

 No one came to save my younger sister after he fell from train - Brother of preethi anguish

ரயில் நிலையத்தில் கேமரா இல்லை: அடுத்த வருடம் திருமணம் செய்து வைக்க திட்டமிட்டு இருந்தோம். மிகவும் கஷ்டப்பட்டு தான் படிக்க வைத்தேன். ரயில் நிலையத்தில் கேமரா வைக்க வேண்டும். மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் கேமரா உள்ளது. அதன்பிறகு வேளச்சேரியில் தான் உள்ளது. இதற்கு நடுவில் இருக்கும் எந்த ரயில் நிலையத்திலும் கேமரா இல்லை" என்றார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததே இத்தகைய குற்றங்கள் நடப்பதற்கு காரணம் என்று பயணிகள் தரப்பிலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பிரம்மாண்டமாக காணப்படும் ரயில் நிலையங்களில் பெரும்பாலானவற்றில் போலீசாரும் பாதுகாப்புக்கு இல்லை.. கேமராக்களும் இல்லை. எனவே இதை பயன்படுத்திக் கொண்டு சட்ட விரோத செயல்கள் அதிகம் நடப்பதாகவும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது. ரயில் நிலையங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் உரிய நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காது என்பது அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+