“எந்த கொம்பனாலும் இங்கு சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது!” வட மாநிலத்தவர் விவகாரம்! மா.சு அதிரடி
வட இந்தியர்கள் விவகாரத்தில் சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்திகளைச் சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், இங்கு எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாகவே வட மாநிலங்களில் இருந்து தொடர்ச்சியாகப் பலரும் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கு ஊதியம் அதிகம் வேலையும் கிடைக்கும் என்பதாலேயே அவர்கள் இங்கு வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் இங்கிருந்து சென்றவர்களும் கூட இப்போது மீண்டும் திரும்பி வருகின்றனர். இதற்கிடையே சில நாட்களாக இங்கு வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாகப் பொய்யான தகவல்கள் பரவின.

வட மாநிலத்தவர்
தமிழ்நாட்டில் கட்டிட வேலை, ஹோட்டல் வேலை உள்ளிட்ட வேலைகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்த வேலைகளுக்கு பெரும்பாலும் வட மாநில இளைஞர்களை பணியமர்த்தப்படுகிறார்கள். இதனால் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு எதுவும் பாதிக்கப்படுவதில்லை என்று தமிழக வணிகர்களும் கூட தொடர்ந்து கூறி வருகின்றனர். இங்கு வாழும் வட மாநில இளைஞர்கள் எவ்வித பிரச்சினையும் இல்லாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.

வதந்தி
இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே இணையத்தில் திட்டமிட்டு பொய்யான தகவல்களைச் சிலர் பரப்பி வருகின்றனர். அதாவது பழைய சம்பவங்களையும் வேறு ஏதோ மாநிலங்களில் நடந்த சம்பவங்களையும் ஏதோ தமிழ்நாட்டில் இப்போது நடந்ததை போலப் பொய்யான தகவல்களைப் பரப்பினர். குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்தி பேசியதாலேயே வட மாநிலத்தவர் கொல்லப்பட்டதாக எல்லாம் பொய்யான தகவல்களைப் பரப்பினர். இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசும் பீகார் அரசும் தொடக்கம் முதல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. பொய்யான தகவல்களைப் பரப்புவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேலும், சம்மந்தப்பட்ட தகவல்களை வலைத்தளங்களில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களைப் பரப்பியவர்களைப் பிடிக்கத் தமிழக போலீசார் பீகார் மற்றும் டெல்லிக்கும் விரைந்துள்ளனர். இந்த விகாரம் தொடர்பாக வட மாநிலங்களின் குழுக்களும் தமிழ்நாடு வந்துள்ளனர். அவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் ஆலோசனையும் நடத்தி வருகின்றனர். இதனிடையே பொய்யான தகவல்களைப் பரப்பி, தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நமது முதல்வர் வெளிமாநில தொழிலாளர்களுக்குச் சிறு அளவில் கூட பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். வெளிமாநில தொழிலாளர்கள் ஒரு வேலை கூட பட்டினியாக இருக்கக் கூடாது என்று நினைத்தவர் முதல்வர்.. கொரோனா காலத்தில் அவர்களுக்கு இலவசமாக உணவு தயார் செய்து கொடுக்க ஏற்படு செய்யப்பட்டது.. அந்த உணவு தயார் செய்து தரும் இடத்தை முதல்வரே நேரடியாகவும் கூட ஆய்வு செய்துள்ளார்.

மனிதநேய மிக்கவர்
அப்போது கல்லூரியில் தங்க வைக்கப்பட்டிருந்த வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவரே உணவும் பரிமாறினார். வெளிமாநில தொழிலாளர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டே கிளம்பினார்.. அதேபோல வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப ரயில்கள் இயக்கப்பட்ட போது, அவர்களுக்கான கட்டணத்தை அரசே ஏற்படும் என்று முதலில் அறிவித்தவரும் முதல்வர் ஸ்டாலின் தான். அந்தளவுக்கு மனிதநேயமிக்க முதல்வர் நமது முதல்வர் அவரது ஆட்சிக்குக் களங்கத்தை ஏற்படுத்தச் சிலர் முயல்கிறார்கள்.

எந்த கொம்பனாக இருந்தாலும்
வட மாநில தலைவர்களை நமது முதல்வர் ஒருங்கிணைத்துள்ளார். வட மாநில தலைவர்களை இங்கு வந்து நமது முதல்வர் பாராட்டிச் சென்றுள்ளனர்.. இதைக் கண்டு பொறாமை கொண்ட சிலர் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இது அனைத்தையும் நாங்கள் எதிர்கொள்வோம். சமயம், சாதி, மதங்களைக் கடந்து தமிழ்நாட்டில் அனைவருமே அண்ணன் தம்பிகளாகவே வாழ்ந்து வருகிறோம். இங்கு எந்த கொம்பனாலும், தமிழ்நாட்டில் சிறு பதற்றத்தைக் கூட உருவாக்க முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications