Hindi: மொழிப் போர் தியாகிகள் தினம்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை! ஸ்டாலின் உறுதி!
சென்னை: "அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை" என மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி மூலக்கொத்தளத்தில் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
மொழிப்போர் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 25 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் மூலக்கொத்தளத்தில் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் அஞ்சலி செலுத்தினர்.

இதற்காக கருப்பு உடை அணிந்துக் கொண்டு ஊர்வலமாக தியாகிகள் நினைவிடத்திற்கு வந்தனர். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீர வணக்கம் வீரவணக்கம் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் என முதல்வர் ஸ்டாலின் முழங்கினார்.
இதையடுத்து மொழிப்போர் தியாகிகளான தாளமுத்து, நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் அவர்களது புகைப்படங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதுகுறித்து ஸ்டாலின் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 25, 2026
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித்… pic.twitter.com/EmVm1TqTXy
இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! என்றார்.












Click it and Unblock the Notifications