"சின்ன மழைக்கே இடுப்பளவு தண்ணீர் நிற்கும்.. ஆனா இந்த வருஷம் இல்லை.. " வடசென்னை மக்கள் மகிழ்ச்சி!
சென்னை: சென்னையில் நேற்றிரவு முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இருப்பினும் வடசென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் பெய்த கனமழையின் போது தண்ணீர் வேகமாக வடிந்தது. கிட்டத்தட்ட 300 மி.மீ. கனமழை பெய்தபோது, மாநகராட்சியின் சிறப்பான நடவடிக்கைகளால் மழை பெய்த சுவடே இல்லாமல் நீர் வேகமாக வெளியேற்றப்பட்டது.
இதற்போது தமிழ்நாட்டின் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னையில் நேற்றிரவு முதலே கனமழை பெய்து வருகிறது. ஆனால் இது வெறும் தொடக்கம்தான் என்றும், அடுத்த 3 நாட்களுக்கு கனமழையின் வீரியம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு காரணம் என்ன?
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுப்பெற்று தமிழகம், புதுவை கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடியவிடிய மழை
சென்னையில் இரவு முதலே கனமழை தொடங்கினாலும், அதிகாலை 4 மணியளவில் தீவிரமடைந்தது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை கொட்டித் தீர்த்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கேகே நகர், அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையிலும் கும்மிருட்டுடன் கனமழை பெய்தது.

வடசென்னையில் கனமழை
இதேபோல் வடசென்னை பகுதிகளான பட்டாளம், புளியங்தோப்பு, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. ஆனால் மழை குறைந்த சில மணி நேரத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக சிறிய மழைக்கே தாங்காத ஜீவா சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மகிழ்ச்சி
இதுகுறித்து வடசென்னை பகுதியில் உள்ள மக்கள் கூறுகையில், வடசென்னை பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறிய மழைக்கே இடுப்பளவு தண்ணீர் நிரம்பிவிடும். ஆனால் நட்ப்பாண்டில் அப்படியில்லை. மாநகராட்சி அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள். இது வரவேற்கத்தக்கது. இவ்வளவு கனமழையிலும் தண்ணீர் தேங்காதது மனநிறைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் நிற்காத நிலையிலும் அனைவரும் பணிக்கு சென்று வருவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இடி, மின்னலுடன் கனமழை.. ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்! மக்களே உஷார்












Click it and Unblock the Notifications