Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள விடுதிகளில் இனி டீ, காஃபி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நலச்சங்கம், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது எனவும், சப்பாத்தி, தோசை வழங்கப்படாது.. சாம்பார் குருமாவுக்கு பதிலாக சட்னி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்திய மோதல் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்து இருப்பதால் சர்வதெச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai Hostels

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு

கத்தார் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் எல்பிஜி ஏற்றுமதி வாராந்திர அளவில் 30 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், நம் நாட்டிலும் பல்வேறு பகுதிகள் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பெங்களூர், மும்பை என நாடு முழுக்க உணவகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் ஹோட்டல்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல்களில் சில உணவுகள் சமைக்கப்படாமல் இருந்தது. சில ஓட்டல்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

வணிக கேஸ் சிலிண்டர்கள் ஏஜென்சியிலும் சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாததால் மூடப்பட்டுள்ளது. இதனால் தட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளது. ஓட்டல்களில் கையிருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து தான் செயல்பட்டு வருவதாக கூறி வருகிறார்கள். தற்போது சென்னையில் 20 சதவீதம் ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டு இருக்கிறது எனவும் இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே நிலை நீடித்தால் 50 சதவீத ஓட்டல்கள் மூடப்படும் நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

சப்பாத்தி, தோசைக்கு பதில் வெரைட்டி ரைஸ்

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தங்கும் விடுதி, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளின் நலச்சங்கம், வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது என அறிவித்துள்ளது. தமிழ்நாடு ஐடி விடுதிகள் மற்றும் பிஜி விடுதி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பிஜி விடுதிகளில் தேநீர், காபி கிடையாது. இதேபோன்று சப்பாத்தி, தோசை வழங்கப்படாது.. சாம்பார் குருமாவுக்கு பதிலாக சட்னி வழங்கப்படும். சைட் டிஷ்க்கு பதிலாக வாரத்தில் மூன்று நாட்களுக்கு முட்டை மற்றும் பப்ஸ் வழங்கப்படும். கலவை சாதங்கள் வழங்கப்படும். கூடுதலாக அப்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி

ஈரான் - அமெரிக்கா போரால் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சூழலில் விடுதி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் சென்னையில் தங்கி வேலை பார்த்து வரும் இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை உள்ளிட்ட நகரங்களில் பிஜிக்களில் வெளியூர்களில் இருந்து தங்கி வேலை செய்து வரும் இளைஞர்களே அதிகம் தங்கியுள்ளனர். ஐடி உள்பட பல்வெறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பிஜிக்களில் அதிக அளவில் தங்கியுள்ள நிலையில், பிஜிக்கள் எடுத்துள்ள இந்த முடிவு பேச்சுலர்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+