இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2024.. தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு பரிசு!
சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதை உரைநடைக்காக ஹான் காங்கிற்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற அனைத்து துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் நாட்டு தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. ஹான் காங் தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் 1970 இல் பிறந்தார். அவள் 10 வயதில் சியோலுக்கு குடிபெயர்ந்தார். ஹான் காங் தீவிர இலக்கியப் பின்னணியில் இருந்து வந்தவர். அவரது தந்தை ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர். தென் கொரியாவில் கவனிக்கத்தக்க எழுத்தாளர் குடும்பத்தில் இருந்து வந்தவர் . எழுத்து மட்டுமன்றி ஹான் காங் கலை மற்றும் இசையிலும் தென் கொரியாவில் பிரபலம்.
பெரும்பாலும் வரலாற்று ரீதியாக நடந்த கொடூரங்கள், மனித வாழ்க்கையின் பலவீனத்தை விதமாக அவர் கவிதைகள், உரைநடையை எழுதி வந்தார்.
ஹான் காங் 1993 இல் 'Literature and Society' என்ற இதழில் பல கவிதைகளை வெளியிட்டு பிரபலம் அடைந்தார். 1995 ஆம் ஆண்டு 'லவ் ஆஃப் யோசு' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிட்டார், அதைத் தொடர்ந்து நாவல்கள் மற்றும் சிறுகதைகள் என பல உரைநடைப் படைப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில்தான் 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது கவிதை உரைநடைக்காக ஹான் காங்கிற்கு பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருது: நேற்று முதல்நாள் 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்க இயற்பியலாளர் ஜான் ஜே ஹாப்ஃபீல்ட் மற்றும் கனேடிய-பிரிட்டிஷ் கணினி விஞ்ஞானி மற்றும் அறிவாற்றல் உளவியலாளர் ஜெஃப்ரி இ ஹிண்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸின் அறிவிப்பின் போது இன்று அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் ஜெஃப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு செயற்கை நரம்பியல் நெட்வொர்க்குகள் மூலம் இயந்திர கற்றலை செயல்படுத்தும் அடிப்படை செயல்திறன் உள்ளிட்ட கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டேவிட் பேக்கர், இங்கிலாந்தின் டெமிஸ் ஹசாபிஸ் மற்றும் ஜான் ஜம்பர் ஆகிய 3 பேருக்கும் 'புரதம்' சார்ந்த ஆராய்ச்சிக்கான இந்த நோபல் பரிசு என்பது நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்தே இன்று 2024 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications