மண்டைக்கேறிய போதை.. குஷிநகர் வீட்டில் கேட்டு அடங்கிய சத்தம்.. அங்கே கண்ட காட்சி.. எகிறி ஓடிய மக்கள்
சென்னை: மதுபோதை மண்டைக்கேறிவிட்டால் ஒரு குடும்பம் எப்படி எல்லாம் சீரழியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம் ஆகும்.. குடும்பத்துக்காக உழைக்க வெளியூர் சென்றவர், தவறான பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார்.. இது இன்று அந்த குடும்பத்தையே பரிதாபத்தில் தள்ளிவிட்டது. என்ன நடந்தது?
உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் குப்தா.. இவருக்கு 30 வயதாகிறது... மும்பையில் தங்கி தனியார் வேலை செய்து வந்தார்.. மனைவி பெயர் பிரியங்கா... இவருக்கு 28 வயதாகிறது... பிரியங்கா தன்னுடைய மாமியார் ரூனா தேவியுடன் சொந்த ஊரான குஷிநகரில் வசித்து வந்தார்..

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மும்பையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார் சிக்கந்தர்... அதற்கு பிறகு மீண்டும் மும்பை வேலைக்கு போகவில்லை.. வேறு எங்கேயும் வேலையையும் தேடவில்லை.. அதுமட்டுமல்ல, சிக்கந்தரின் நடவடிக்கையிலும் பெரும் மாற்றம் தென்பட்டது..
கண்ணை மறைத்த போதை
சொந்த ஊரில் இருந்தவரை ஒழுங்கான வாழ்க்கையை வாழ்ந்து வந்த சிக்கந்தர், மும்பை சென்று திரும்பி வந்த பிறகு முற்றிலும் மாறிய மனிதராகிவிட்டாராம்.. மதுப்பழக்கத்துக்கும் ஆளாகி இருந்தார்.. நாளுக்கு நாள் அதிகரித்த மது பழக்கம் தீவிரமானது.. கஞ்சா பயன்பாடு அதிகரித்தது... எந்நேரமும் போதையில் நடமாடி வந்தார்.. இதனால் அடிக்கடி வீட்டில் சண்டையும், தகராறும் வெடித்தது...
போதை கண்ணை மறைக்கும் போதெல்லாம் தன்னுடைய அம்மாவையும், பிரியங்காவையும் தாக்கியதாக கூறப்படுகிறது.. தினந்தோறும் சிக்கந்தரின் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள் மனைவியும், தாயும்.
இந்த நிலையில் திங்கட்கிழமை அன்று வழக்கம்போல் மதுபானம் குடித்துவிட்டு சிக்கந்தர் வீட்டிற்கு வந்துள்ளார்.. போதை தலைக்கேறியதும் மனைவி பிரியங்காவுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.. உடனே அவரது அம்மா ரூனா அவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.. ஆனால் சிக்கந்தருக்கு கோபத்தை அதிகமாக்கிவிட்டது...
அந்த மாமிசம் சாப்பிட்டார்
ஒரு கட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதே தெரியாத நிலையில் சிக்கந்தர் இருவரையும் தாக்க தொடங்கியுள்ளார்... தெருவில் கிடந்த சிமெண்ட் செங்கலை எடுத்த அவர் மனைவி மற்றும் அம்மாவின் தலைக்கு பல காயங்கள் ஏற்பட்டன.. இதனால் அவர்கள் 2 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இரு பெண்களின் அலறல் சத்தம் நின்றதுமே அச்சமடைந்த அக்கம் பக்கத்தினர் சிக்கந்தர் வீட்டில் எட்டிப்பார்த்துள்ளனர்.. அங்கே இறந்து கிடந்த மனைவி, அம்மா அருகில் உட்கார்ந்து, அந்த மாமிசத் எடுதது மாமிசம் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் அக்கம்பக்கத்தினரை பார்த்ததுமே, எழுந்து வந்து அவர்களையும் சிக்கந்தர் தாக்கியதாக கூறப்படுகிறது.. இதனால் அனைவரும் கூச்சலிட்டு கொண்டே அங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டனர்.. அத்துடன் உடனடியாக போலீசுக்கும் தகவல் சொல்லி உள்ளனர்..
2 பெண்கள்
விரைந்து வந்த போலீசார், சிக்கந்தரை கண்டு பயந்தனர்.. பிறகு மெல்ல அவரிடம் சென்று சுற்றி வளைத்து கைது செய்தனர்... 2 பெண்களின் சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான விசாரணையையும் நடத்தி வருகிறார்கள்.. உண்மையிலேயே சிக்கந்தர் மது, கஞ்சா காரணமாக இப்படி நடந்து கொள்கிறாரா அல்லது நரம்பியல் கோளாறு / மனநிலை பாதிப்பு போன்ற காரணங்களால் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரிக்கிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications