தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த தேதிகளில் வலுப்பெறும்.. குடையோட நடமாடுங்க!
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 6, 7, 8-ஆம் தேதிகளில் வடகிழக்கு பருவமழை வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நவம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. தென் தமிழகத்தில் மழை தீவிரமடைந்தது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறுகையில் தெற்கு வங்கக் கடலின் மத்தியில் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. அடுத்த 24 மணி் நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
[தென்தமிழகத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை.. இன்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு!]
சென்னையை பொருத்தவரை மிதமான மழை பெய்யும். நவம்பர் 6, 7, 8, ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக் கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு செல்லவேண்டாம். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க சென்றவர்கள் நவம்பர் 8-க்குள் திரும்ப வேண்டும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு