சென்னை மக்களே உஷார்... நவ. 14 முதல் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது வானம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னையில் வரும் 14-ஆம் தேதி முதல் கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை காலம் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

வானிலை மையம்

வானிலை மையம்

எனினும் சென்னையை பொருத்தவரை கடந்த சில தினங்களாக அதாவது தீபாவளி பண்டிகை முதலே மழை இல்லை. இந்நிலையில் வங்கக் கடலில் கஜா என்ற புயல் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழை பெய்யும்

கனமழை பெய்யும்

இதனால் வரும் 16-ஆம் தேதி முதல் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புண்டு என்றும் கூறியது. இந்நிலையில் நார்வே வானிலை மையம் கூறுகையில் நவம்பர் 14-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை சென்னையில் கனமழை பெய்யும்.

வெள்ளம்

வெள்ளம்

இதைத் தொடர்ந்து நவம்பர் 19-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற எச்சரிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அவர்கள் கண்முன் 2015-ஆம் ஆண்டு வெள்ளம் நிழலாடுகிறது.

அரசு முன்னேற்பாடுகள்

அரசு முன்னேற்பாடுகள்

எனினும் அந்த அளவுக்கு சென்னையில் கஜா புயல் பாதிப்பை ஏற்படுத்தாது என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே மக்கள் இந்த புயலால் அச்சப்பட வேண்டாம். தமிழக அரசும் மழை முன்னேற்பாடுகளை செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+