Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாட்டு நாட்டு பாட்டு மட்டுமல்ல RRR படமே ஆஸ்கார் வென்ற தருணம்..வாழ்த்துக்கள்..மதன் கார்க்கி

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மதன் கார்க்கி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.எஸ்.ராஜமவுலி இந்திய திரை வரலாற்றில் மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளார். எந்த இந்திய திரைப்படத்திற்கும் கிடைக்காத பெருமை ராஜமவுலி இயக்கிய RRR படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. இது பாடலுக்கு மட்டுமல்ல படத்திற்கே விருது கிடைத்தது போல மகிழ்ச்சி அடைவதாக மதன் கார்க்கி கூறியுள்ளார்.

கடந்த 2009 ஆண்டு ஆஸ்கார் விருது மேடையில் விருதினை கைகளில் ஏந்தி எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறி தமிழின் பெருமையை உலகம் அறியச் செய்தவர் ஏ.ஆர்.ரகுமான். இன்று மீண்டும் தென் இந்தியாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் ஆஸ்கார் விருது விழா மேடையில் கிடைத்துள்ளது.

சங்கீத ஸ்வரங்கள் ஏழு இருக்கா.. இன்னும் இருக்கா என்று இன்றைக்கும் பலராலும் முணுமுணுக்கப்படும் பாடல் அழகன் படத்தில் இடம் பெற்ற பாடல். அந்த பாடலுக்கு இசையமைத்தவர் மரகதமணி என்ற கீரவாணி.

கீரவாணி

கீரவாணி

தமிழில் பாலச்சந்தரால் மரகதமணியாக அறிமுகம் செய்யப்பட்டவர் தெலுங்கில் கீரவாணியாக இசை ராஜாங்கம் நடத்தி வருகிறார். எஸ்.எஸ்.ராஜமவுலியின் பல படங்களிலும் இசை அமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். பாகுபலி படங்களில் அவரது இசை பலராலும் ரசிக்கப்பட்டது.

நாட்டு நாட்டு பாடல்

நாட்டு நாட்டு பாடல்

இன்றைக்கு RRR படத்தில் இடம் பெற்ற நாட்டு..நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருதினை வென்று உலக அரங்கில் மீண்டும் இந்திய இசையை தலைநிமிரச்செய்துள்ளார். இயக்குநர் ராஜமவுலிக்கும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு நன்றியை பகிர்ந்து கொண்டார். பாடலாக பாடி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

ஆஸ்கார் விருது விழா

ஆஸ்கார் விருது விழா

நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருது விழா மேடையில் ஒளிபரப்பான அந்த தருணம் அனைவருமே எழுந்து உற்சாகமாக ஆடி இந்திய திரைப்படத்துறையினருக்கும் ராஜமவுலி குழுவினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

அன்று ஏ.ஆர்.ரகுமான்..இன்று கீரவாணி

அன்று ஏ.ஆர்.ரகுமான்..இன்று கீரவாணி

2009 ஆம் ஆண்டு ஏ.ஆர் ரகுமான் ஜெய்ஹோ பாடலுக்கு ஆஸ்கர் விருதினை வென்ற நிலையில் இந்த ஆண்டு இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசியர் சந்திரபோஸ் ஆகியோர் நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கார் விருதினை பெற்றுக்கொண்டனர்.

மதன் கார்க்கி வாழ்த்து

மதன் கார்க்கி வாழ்த்து

நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது குறித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட பாடலாசிரியர் மதன் கார்க்கி இது பாடலுக்கு மட்டுமல்ல படத்திற்கே விருது கிடைத்தது போல உணர்வதாக தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி, படத்தில் இடம்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்கள், நடன கலைஞர்கள், கீரவாணி, பாடலாசியர் சந்திரபோஸ், பாடகர்கள் அனைவருக்குமே எனது வாழ்த்துக்கள் என்று மதன் கார்க்கி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+