சென்னையில் பிரபல ரவுடி சிடி மணி நள்ளிரவில் கைது.. தலைமறைவாக இருந்தவரை தூக்கிய தனிப்படை!
சென்னை: சென்னையை கலக்கிய பிரபல ரவுடி சிடி மணியை நள்ளிரவில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி. இவர் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் சிடி விற்பனை செய்து வந்ததால் சிடி மணி என்று அழைக்கப்பட்டார்.
நாளடைவில் அவர் சிலருடன் கைகோர்த்து கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி போன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அவர் மீது 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
ஆசிரியர் மீது பாலியல் புகார்.. சென்னையில் உள்ள மேலும் ஒரு பிரபல பள்ளிக்கு நோட்டீஸ்
குண்டர் சட்டம்
மேலும் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் சுற்றித்திரியும் ரவுடிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என காவல்துறையினர் அதிரடியாக தெரிவித்தனர். மேலும் பல்வேறு நிலுவையில் உள்ள வழக்குகள் பதியப்பட்டுள்ள சி.டி மணி தலைமறைவாக இருந்து உள்ளார்.
திண்டுக்கல் தாதா
திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல தாதா ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டு அவர் மறைந்தவுடன் மணி தலைமையில் ஒரு புதிய ரவுடி கும்பல் உருவானது. இவர் இதுவரை 3 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் சிடி மணியை கொலை செய்ய முயற்சி நடந்தது.
காவல் துறை
இந்த விவகாரத்தில் 4 பேர் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் தேனாம்பேட்டையில் பைக்கில் வந்து சிடி மணி, காக்கா தோப்பு பாலாஜி ஆகியோர் மீது வெடிகுண்டு வீசியதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
தீவிர விசாரணை
இதையடுத்து சிடி மணி எங்கே இருக்கிறார் என்பது குறித்து தனிப்படை போலீசார் ரகசிய தகவல் கிடைத்த அடிப்படையில் நேற்று நள்ளிரவு சென்னை அடுத்த நாவலூரில் தங்கியிருந்த இடத்தில் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.