இன்று முதல் நாடு முழுக்க உள்ள ரயில் நிலையங்களில் வரும் அட்டகாசமான வசதி.. இனி பிரச்சினையே இல்லை!
சென்னை: இன்று முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்களை ஸ்டேஷனில் இருந்தபடியே ஆன்லைனில் எடுக்கும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்தியன் ரயில்வே பயணிகள் வசதியை மேம்படுத்த பல்வேறு வசதிகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையே இன்று முதல் ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுக்க ஆன்லைன் மூலமே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.
யுபிஐ: 2016இல் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நீக்க அறிவிப்பிற்குப் பிறகு நமது நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் ஒருவரது கணக்கில் இருந்து மற்றொருவர் கணக்கிற்குப் பணம் அனுப்ப சில மணி நேரம் வரை ஆகும். அதற்குத் தனியாக சர்வீஸ் கட்டணம் வேறு செலுத்த வேண்டும் என்ற சூழல் இருந்தது. ஆனால், இப்போது மொபைல் இருந்தாலே போதும் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
அதென்ன “புஷ் புல்”.. ஏழைகளுக்காக ரெடியாகும் வந்தே பாரத் ரயில்! இனி குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம்
பெட்டிக் கடைகளில் கூட இப்போது யுபிஐ மூலம் பணத்தைப் பெறுகிறார்கள். கூகுள்பே, போன்பே டிஜிட்டல் என ஏகப்பட்ட செயலிகள் இந்த யுபிஐ மூலம் இயங்குவதாலும் இதற்கு சர்வீஸ் சார்ஜ் எதுவும் இல்லை என்பதாலும் பலரும் இந்த செயலியைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ரயில் நிலையங்களில் இந்த யுபிஐ மூலம் பணம் செலுத்த வாய்ப்பு இல்லாமலேயே இருந்தது.
புது வசதி: இந்தியன் ரயில்வே பொறுத்தவரை முன்பதிவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்கும் வசதி பல ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல முன்பதிவு இல்லாத டிக்கெட்களை யுடிஎஸ் செயலி மூலம் ஆன்லைனில் எடுக்கலாம். ஆனால், முன்பதிவு இல்லாத டிக்கெட்களை கவுண்டரில் எடுத்தால் அங்கே யுபிஐ மூலம் பணம் அனுப்ப முடியாது. பணத்தை மட்டுமே கொடுத்து டிக்கெட் எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
இதனால் சில்லறை பிரச்சினை தொடங்கி பல விஷயங்கள் இருந்தது. எனவே அங்கேயும் யுபிஐ வசதியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. இந்தச் சூழலில் தான் இன்று ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரயில் நிலையங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அதாவது இனி நீங்கள் ரயில் நிலையங்களில் சென்று டிக்கெட் எடுத்தால் கண்டிப்பாக ரொக்கமாகப் பணம் தர வேண்டும் என்று அவசியம் இல்லை. யுபிஐ மூலம் மொபைலில் இருந்தே அனுப்பிவிடலாம். இதன் மூலம் பிரச்சினை இல்லாமல் மிக எளிதாக டிக்கெட் எடுக்கலாம்.
பொதுமக்கள் ரயில் நிலையங்களில் யுபிஐ வசதி வேண்டும் என்று நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்த நிலையில், ஒரு வழியாக அந்த வசதியை அறிமுப்படுத்திவிட்டார்கள் என்பதே சிறப்பு. இது அடிக்கடி வெளியூர் பயணிப்போருக்கு பெரியளவில் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications