“SIR விண்ணப்பம் கால அவகாசம் நீட்டிப்பு.. திமுகவுக்கு கிடைத்த வெற்றி".. சொல்கிறார் என்.ஆர்.இளங்கோ
சென்னை: "SIR விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளதற்கு காரணம் திமுக; இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி" என திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான (SIR) கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் SIR படிவங்களை நிரப்பித் திரும்ப ஒப்படைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடையும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

குறுகிய கால அவகாசத்திற்குள் பணியை முடிப்பது சாத்தியமில்லை என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் சிலர், மன அழுத்தம் மற்றும் நெருக்கடி காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தற்போது இந்தக் கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 11ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்கள் டிசம்பர் 11 வரை திருப்பி ஒப்படைக்கலாம். தமிழக அரசு மற்றும் கேரளாவின் எதிர்ப்பை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ, "SIR பணிகளை தொடங்கியது முதலே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. திமுகவின் எதிர்ப்புகளில் முதன்மையானது, SIR மேற்கொள்வதற்கான காலக்கெடு நடைமுறைக்கு ஒவ்வாததாக இருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். திமுக வழக்கும் தொடர்ந்தது. திமுக கூட்டணி கட்சிகள் அறப் போராட்டங்களை நடத்தின.
தற்போது, வாக்காளர்கள் SIR விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து தருவதற்கான காலக்கெடுவை டிசம்பர் 11 ஆம் தேதி வரை தேர்தல் ஆணையம் நீட்டித்துள்ளதற்கு காரணம் திமுக. இது திமுகவின் ஜனநாயகப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.
SIR பணிகள் தொடர்ந்தும் சிக்கல்கள் நிறைந்தே உள்ளன. இந்த சிக்கல்களை தேர்தல் ஆணையம் தீர்க்கவில்லை. SIR- விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எதனையும் தெளிவாக, வெளிப்படையாக கூறுவதும் இல்லை. வாக்காளர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க திமுக மட்டுமே பணியாற்றி வருகிறது.
தமிழகத்தில் 50% வாக்காளர்களுக்கு SIR படிவங்களை நிரப்புவதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன. பீகார் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்கள் தமிழ்நாட்டிலும் SIR விண்ணப்பத்தை தருகின்றனர். இந்த விண்ணப்பங்களைத் தரும் போது ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதில் குழப்பம் இருக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் தரவில்லை." எனத் தெரிவித்துள்ளார்.
-
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications