தமிழகத்தில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்த 359 பேர்.. கடலூரில் ஆச்சர்யம்
சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 359 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 216 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் (வெள்ளிக்கிழமை) 437 ஆக அதிகரித்தது. இதில் தமிழகத்திற்குள் மட்டும் 385 பேர் பாதிக்கப்பட்டனர். இதுதவிர வெளிமாநிலத்தில் இருந்துவந்து பல்வேறு மாவட்டங்களில் குவாரண்டைனில் உள்ளவர்களில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் எனில் நேற்று ஒரே நாளில் 349 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 216 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். காலையில் 148 பேரும், மாலையில் 68 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் பெரும்பாலோனார் கோயம்பேடு சந்தை உடன் தொடர்பு உடையவர்கள் ஆவர்.

சென்னையில் 783 பேர்
இதனிடையே தமிழகம் முழுவதும் இதுநாள் வரை 2599 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். சென்னையில் 783 பேரும், கோவையில் 144 பேரும், அரியலூரில் 195 பேரும். திண்டுக்கல்லில் 83 பேரும், கள்ளக்குறிச்சியில் 69 பேரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மதுரையில் 87
திருவள்ளூரில் 84 பேரும், விழுப்புரத்தில் 128 பேரும், திருப்பூரில் 114 பேரும், நாமக்கல்லில் 77 பேரும், சேலத்தில் 35 பேரும், ஈரோட்டில் 65 பேரும், திருச்சியில் 56 பேரும், மதுரையில் 87 பேரும், கரூரில் 14 பேரும், நீலகிரியில் 11 பேரும், புதுக்கோட்டையில் 2 பேரும், தஞ்சாவூரில் 53 பேரும், தேனியில் 42 பேரும், தென்காசியில் 34 பேரும், வேலூரில் 20 பேரும், செங்கல்பட்டில் 68 பேரும் குணம் அடைந்துள்ளனர். இன்னும் சில மாவட்டங்களில் நேற்று மாலை பலர் குணம் அடைந்துள்ளனர். அவர்களின் விவரம் இன்று தெரியவரும்.

5 மாவட்டங்களில் கொரோனா இல்லை
மே 15ம் தேதி மாலை நிலவரப்படி தமிழகத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்கள் கொரோனாவில் இருந்து முழுமையாக மீண்டுள்ளன இது தவிர சிவகங்கை மாவட்டமும் இந்த லிஸ்டில் வர வேண்டியவை. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து தனிமைப்படுத்துதலில் ஒருவர் கொரோனாவுடன் இருப்பதால் இந்த லிஸ்டில் இல்லை. திருவாரூர் (3) நாகப்பட்டினம் (3), நீலகிரி (3), தர்மபுரி(4) புதுக்கோட்டை(5), ராமநாதபுரம் (9), ஆகிய மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் சிகிச்சை பெறுபவர்கள் இருப்பதால் விரைவில் கொரோனாவில் இருந்து இவை முழுமையாக மீள வாய்ப்பு உள்ளது.

கவனம் தேவையானவை
அதேநேரம் சென்னை, அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, மதுரை, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்தால் விரைவில் தமிழகத்திற்குள் கட்டுக்குள் வரும் என்ற எதிர்பார்க்கலாம். அதற்கு பொதுமக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். அரசு பரிசோதனையை முடிந்த அளவு மிகவும் அதிகரிக்க வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications