முதுகில் குத்தும் துரோக கூட்டம்.. இறைவனின் தீர்ப்பே இறுதியானது! ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ட்வீட்
சென்னை: நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே என ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு வழக்கின் தீர்ப்பு நேற்றைய தினம் வெளியானது. இந்த தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அதிமுக பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.
அப்படியென்றால் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதும் செல்லும், அதைவிட முக்கியம், ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதும் செல்லும் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஸ் தரப்பின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை நடக்கிறது.

ஓபிஎஸ் மகன்
இந்த நிலையில் தீர்ப்பு குறித்து ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நேர்மையான வழியை பின்பற்றுபவர்களுக்கு வெற்றியும் பின்னடைவும் சரிசமமே. கரங்களில் ஏந்தி இருக்கும் நீதிதராசு சரியாக இருக்கிறதா என்பதை அறிய நீதி தேவதை ஒருமுறை கண்ணைக் கட்டிய துணியை கழற்றி கண் திறந்து பார்த்து சரி செய்வது இந்திய இறையாண்மைக்கு நல்லது.

போர் படை தலைவன்
போர்படை தலைவனாக பொறுப்பேற்று எதிரியை எதிர்த்து, நெஞ்சை நிமிர்த்தி போரிடும் பொழுது, பின் நின்று முதுகில் குத்தும் துரோக கூட்டத்தை சிறிது கவனித்தும் தன் இனம் தானே என்று அமைதி காத்ததினால் சிறிது தடுமாற்றம் ஏற்பட்டாலும் தலைவன் எழுந்து நின்று திரும்பி பார்த்து துரோகிகளை எதிர்கொள்ளும் போது ஏற்படும் விளைவுகளை எதிர்காலம் அனைவருக்கும் உணர்த்தும்.

கழகத் தலைவர்கள்
எங்கள் கழக தலைவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் காலச்சக்கரத்தால் வழங்கப்படும் இறைவன் தீர்ப்பு வரும் வரை எங்களது லட்சிய பயணங்கள் தொடரும் என ஜெயபிரதீப் கூறியுள்ளார். இது போல் அவர் பல தருணங்களில் அதிமுகவில் நடக்கும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு பதிவில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார்.

காலை பிடித்து பதவி வாங்கி
அவர் தனது ட்வீட்டில் காலைப் பிடித்து பதவி வாங்கி,
பதவி வாங்கி பணத்தை சேர்த்து, சேர்த்த பணத்தால் கூட்டத்தை கூட்டி, கூட்டத்தை வைத்து பதவி பெற
நீதியை நிதியால் வளைத்து, பொய் சூழ்ச்சி வஞ்சகத்தோடு, ரத்தத்தின் ரத்தங்களை பகையாக்கி,
இரு பெரும் தலைவர்கள் உயிரைக் கொடுத்து வளர்த்த பேரியக்கத்தை அழித்துக் கொண்டிருக்கும் பதவிவெறி பிடித்த மனிதனே... தற்போது நாங்கள் என்ன சொன்னாலும் தங்களது அறிவுக்கு ஏறாது. உங்களை சூழ்ந்து இருக்கும் பதவியும் பணமும் உங்களை விட்டு நீங்கும்போது உண்மை தன்மை புரியவரும்; தான் செய்தது தவறு என்று தெரிய வரும். அத்தகைய காலத்தினால் வழங்கப்படும் இறைவனின் தீர்ப்புக்காக சோதனைகளோடு போராடி பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என ஜெயபிரதீப் குறிப்பிட்டுள்ளார்.
-
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
Kaliyammal: காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
அதிமுகவை சமுதாய கட்சியாக மாற்றியவர் எடப்பாடி பழனிசாமி.. தென் மாவட்டங்களில் ஆட்டத்தை தொடங்கிய ஓபிஎஸ்! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications