ஜெயலலிதா மரணம்.."ஓபிஎஸ்சும் குற்றவாளிதான்"..ஏன் இதை இன்று சொல்கிறோம் என்றால்..அமைச்சர் ரகுபதி பரபர
ஏன் இதையெல்லாம் இன்று சொல்கிறோம் என்று சொன்னால் நீதிமன்றத்தில் ஒருவர்(விஜயபாஸ்கர்) போய் தடை வாங்கிவிட்டார் என்று பத்திரிகையாளர்கள் கேட்டார்கள். அதற்காகத்தான் சொல்கிறோம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
சென்னை: ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டுமா இல்லையா? எனக்கு எதுவும் தெரியாது... நியாபகம் இல்லை. மறந்துட்டேன். கருத்து சொல்ல விரும்பவில்லை. இப்படித்தான் சாட்சியத்தில் இரண்டு நாள் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்றால் அப்போது ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள் என்று ஓ பன்னீர் செல்வத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சந்தேகம் கிளப்பினர். முதல்வர் பதவியை ராஜினமா செய்து விட்டு 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி தர்மயுத்தம் நடத்திய ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் தர்மயுத்தம் நடத்தினார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையம்
இதையடுத்து, ஓய்வு பெற்ற ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கபட்டது. ஆறுமுக சாமி ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜரான ஓ பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணத்தில் தனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்று பதிலளித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையிலும் இது தொடர்பாக கூறப்பட்டு இருந்தது.

ஆணையம் அமைக்க வேண்டும்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கையில், ஓ.பன்னீர்செல்வம் சாட்சியம் தொடர்பாக கூறப்பட்டு இருந்ததாவது: எந்த சூழ்நிலையில் முதல்வர் மரணமடைந்தார் என்பதை அறிய ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் எனப்படும் போராட்டத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டார். விசாரணை நடத்த ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தான் வைத்தார். ஆனால் அவருக்கு தெரிந்த வரையில் மறைந்த முதல்வரின் மரணம் இயற்கைக்கு மாறானது.. சந்தேகம் இல்லை என்று அவர் தனது சாட்சியத்தில் திட்டவட்டமாக கூறியுள்ளார்' என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்
ஓ பன்னீர்செல்வத்தின் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுப்பதாக அப்போதே அரசியல் வட்டாரத்திலும் அவரது எதிர்க்கோஷ்டியினர் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓ பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லவில்லை எனவே அவரும் ஒரு குற்றவாளிதான் என்று அமைச்சர் ரகுபதி என சாடியுள்ளார்.

ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள்
இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி கூறியதவாது: - ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக ஓ பன்னீர் செல்வம் கூறினார். மரணத்தில் மர்மம் இருப்பதாக சொல்லிவிட்டு கோர்ட்டில் சாட்சி சொல்ல வேண்டுமா இல்லையா? எனக்கு எதுவும் தெரியாது... நியாபகம் இல்லை. மறந்துட்டேன். கருத்து சொல்ல விரும்பவில்லை. இப்படித்தான் சாட்சியத்தில் இரண்டு நாள் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் என்றால் அப்போது ஏன் தர்மயுத்தம் நடத்துனீர்கள்.

ஓபிஎஸ்-சும் ஒரு குற்றவாளி ஆகிறாரா
அப்போது ஏன் சாவில் சந்தேகம் இருப்பதாக சொன்னீர்கள். ஓபிஎஸ்-சும் ஒரு குற்றவாளி ஆகிறாரா இல்லையா...ஏன் இதையெல்லாம் சொல்கிறோம் என்று சொன்னால் நீதிமன்றத்தில் ஒருவர் போய் தடை வாங்கிவிட்டார் என்று பத்திரிகையாளர்கள் இது குறித்து கேட்டார்கள். அதற்காகத்தான் சொல்கிறோம். அவர்(விஜயபாஸ்கர்) இடைக்கால தடைதான் வாங்கியிருக்கிறார். தடையை எப்படி விலக்குவது என்று எங்களுக்கு தெரியும்" என்றார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications