Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திரைமறைவில் நடக்கும் வேலைகள்.. தேர்தல் நெருங்கும்போது பாருங்க! 'சஸ்பென்ஸ்' வைக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : "நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். மறைமுகமாக சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நிலைமை அப்படியே மாறும். பொறுத்திருந்து பாருங்கள்." என சஸ்பென்ஸ் வைக்கிறார் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி.

 O Panneerselvam doing some works secretly behind the screen : says Kolathur krishnamoorthy

ஓபிஎஸ் ஆதரவாளர் பேட்டி : ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், "அண்ணாமலை தான் டெல்லிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மீடியேட்டர். அவர்தான் டெல்லிக்கு எடப்பாடி பழனிசாமி பற்றி உயர்வாகச் சொல்லி வருகிறார். டெல்லிக்கு செல்வதற்கு முன்பு இங்கு மேனேஜர்களிடம் எல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லை, டெல்லியில் இருக்கும் பாஸ் உடன் பேசிக்கொள்வோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார், ஆனால் மீட்டிங்கில் அண்ணாமலையுடன் அமர்ந்திருந்தார். மீட்டிங் முடிந்தபிறகு எங்களுக்கும் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் இல்லை என்கிறார்.

அண்ணாமலையும், எடப்பாடி பழனிசாமியோடு எந்த மோதலும் இல்லை என்கிறார். அண்ணாமலை கொங்கு மண்டலத்தில் ஏதோ ஒரு தொகுதியில் எம்.பியாக ஜெயிக்க வேண்டும். அதுதான் அவரது அஜெண்டா. அதற்கு இவர்களை எல்லாம் பகைத்துக்கொள்ளக் கூடாது. அதற்காக ஒரு டிராமா போட்டு எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் அடிப்படையில் தான் செயல்படுகிறார்.

மறைமுகமாக சில வேலைகள் : எங்களை யாரும் கைகொடுத்துத் தூக்கவேண்டிய நிலை இல்லை. எங்களை யார் கைவிட்டாலும் நாங்கள் கீழே விழும் நிலைமையில் இல்லை. நாங்கள் மக்களை மட்டுமே நம்பியுள்ளோம். நாங்கள் எங்களுக்கென வலுவான கட்டமைப்போடு முன்னேறி வருகிறோம். திருச்சி மாநாட்டிலேயே ஓபிஎஸ்ஸின் பலத்தைப் பார்த்திருப்பீர்கள். அவரை சாதாரணமாக நினைக்கிறார்கள். போகப் போகப் பாருங்கள். இன்னும் 2 மாநாடுகளில் ஓபிஎஸ் இருக்கும் இடத்தைப் பாருங்கள்.

 O Panneerselvam doing some works secretly behind the screen : says Kolathur krishnamoorthy

பாஜகவை நாடி நாங்கள் செல்லவில்லை. பாஜக இப்படி அப்படி என இரு பக்கமும் மாறி மாறி போடும் வேஷங்களை எல்லாம் இனி நாங்கள் நம்பத் தயாராக இல்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து நியாயத்தைக் கேட்கிறோம். இரட்டை இலை சின்னத்தில் தான் நாங்கள் போட்டியிடுவோம். மறைமுகமாக சில வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு நிலைமை அப்படியே மாறும். அவற்றைப் பொறுத்திருந்து பாருங்கள்.

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்திருந்தாலும், நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என ஒரு வரியைச் சேர்த்துள்ளது தேர்தல் ஆணையம். ஒரே தீர்ப்பில் எல்லாமே புஸ்வானம் ஆகிவிடும். எடப்பாடி பழனிசாமி ஒரேயடியாக கீழே விழுந்துவிடுவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+