யாருமே எதிர்பார்க்கல.. ஓபிஎஸ் வைத்த மெகா டுவிஸ்ட்! அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தொடக்கம்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.வின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் ஓ.பி.எஸ். பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், அதிமுக பெயர் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ். தரப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ.பி.எஸ். தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பு வரும் வரை ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தமாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். இந்த உத்தரவின்படி, ஓ.பி.எஸ். நவம்பர் 18 ஆம் தேதி சட்டமன்றத்திற்கு வந்த போது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தாமல் காவி வேட்டியை அணிந்து வந்தார்.
இந்நிலையில், இன்று ஓ.பி.எஸ். சென்னை எழும்பூரில் காலை 10 மணியளவில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். தலைமையில் நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்திலும் ஓ.பி.எஸ். காவி வேட்டி அணிந்து கொண்டு பங்கேற்றார். அதேபோல் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்தி இருந்தனர். இந்தக் கூட்டத்தில் அவரது ஆதரவாளர்களும், நிர்வாகிகளும், ஓ. பன்னீர் செல்வத்திற்கு மாலை அணிவித்து வீரவாள் பரிசாக வழங்கினார்கள்.
இந்த கூட்டத்தில் ஓ.பி.எஸ். எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஓபிஎஸ் தனிக் கட்சி தொடங்கப்போவதாகவும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், ஜனவரி 6 ஆம் தேதி கோவை நடத்தப்பட இருக்கும் மாநாடு ஏற்பாடுகள் குறித்து அவர் நிர்வாகிகள் ஆலோசித்து இருக்கிறார். அத்துடன் இந்த கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற குழுவை தொடங்கிய ஓ பன்னீர்செல்வம் தனியாக கட்சி தொடங்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications