Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துரோகி.. அண்ணன் ஆகிட்டாரே.. எடப்பாடியுடன் ஓபிஎஸ் சமாதானம்.. அசைன்மென்டை முடித்த டெல்லி தலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிட்டத்தட்ட கடந்த 4-5 வருடங்களாக எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று அழைத்து வந்த ஓ பன்னீர்செல்வம் இப்போது மனம் மாறி உள்ளார். அதிமுகவில் ஒன்று சேர நான் ரெடி.. அவங்க ரெடியா என்றும், இறுதி முடிவினை அண்ணன் எடப்பாடி தான் எடுக்க வேண்டும் என்று ஓ பன்னீர் செல்வம் கூறி உள்ளார். அதாவது துரோகி என்று எடப்பாடியை அழைத்த ஓ பன்னீர்செல்வத்திற்கு இப்போது எடப்பாடி மீண்டும் அண்ணன் ஆகிவிட்டார்!

அதிமுகவில் நடந்த இந்த மாற்றம்.. அந்த கட்சியின் பிளவை மீண்டும் சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக அதிமுக மீண்டும் பலமான இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே சட்டப்போராட்டம் நடத்தி வந்தோம்.

O Panneerselvam

எம்ஜிஆர், ஜெயலலிதாவை முதல்வராக கொண்டு சென்ற மாவட்டம் தேனி. அதிமுக தொண்டர்களின் உரிமையை மீட்கவே நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி வருகிறோம். அந்தப் போராட்டத்தில் இருந்து மாறுபட வேண்டுமென்றால், பிரிந்து கிடக்கும் அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தலையாய கோரிக்கை. சட்டசபைத் தேர்தலில் போட்டி என்ற முடிவை எடுக்கவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் எடப்பாடி உடன் சமாதானமாக செல்லவே விரும்புகிறார் என்று தோன்றுகிறது.

காரியத்தை சாதித்த டெல்லி

இதன் மூலம் என்.டி.ஏவை வலுப்படுத்தும் காரியத்தை கிட்டத்தட்ட டெல்லி தலைகள் சாதித்துவிட்டனர் என்றுதான் கூறப்படுகிறது. இதற்கு காரணமாக இருந்தவர் பியூஸ் கோயல் என்றுதான் சொல்ல வேண்டும். 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வெற்றிக்கான வியூகத்தை வகுக்கும் சிற்பியாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உருவெடுத்துள்ளார். டெல்லி மேலிடம் அவருக்கு வழங்கிய பணிகளை மிகக் குறுகிய காலத்தில் முடித்து, சிதறிக் கிடந்த எதிர்க்கட்சிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் 2026 தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மிக அமைதியாகவும், அதேசமயம் அதிரடியாகவும் செயல்பட்டு ஒரு 'மெகா' கூட்டணியை உருவாக்கியுள்ளார். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரின் நம்பிக்கைக்குரியவராக, தமிழக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஏற்ற கோயல், அதில் நூறு சதவீத வெற்றியைக் கண்டுள்ளார்.

டிடிவி தினகரனின் வருகை: பிரிந்த உறவுகள் இணைந்த தருணம்

பியூஷ் கோயலின் வியூகத்தில் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுவது டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வந்ததுதான். கடந்த ஜனவரி 21, 2026 அன்று, சென்னையில் பியூஷ் கோயலைச் சந்தித்த தினகரன், முறைப்படி தனது ஆதரவை வழங்கினார்.

பங்காளிச் சண்டை முடிவுக்கு வந்தது: எடப்பாடி பழனிசாமி (EPS) மற்றும் டிடிவி தினகரன் இடையே ஒன்பது ஆண்டுகளாக நீடித்த பகைக்கு கோயல் முற்றுப்புள்ளி வைத்தார். தினகரன் - ஈபிஎஸ் இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தது, தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் அதிமுக கூட்டணிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளது.

முக்குலத்தோர் வாக்கு வங்கி: தினகரனின் வருகை, சிதறிக் கிடந்த 'அம்மா'வின் உண்மையான தொண்டர்களை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. இது திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பல இடங்களில் கடும் சவாலைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி பேச்சுவார்த்தைகளின் வெற்றிகரமான முடிவு

பியூஷ் கோயல் வெறுமனே ஒரு பேச்சுவார்த்தையாளர் மட்டுமல்ல, ஒரு சிறந்த ஒருங்கிணைப்பாளர் என்பதையும் நிரூபித்துள்ளார்.

  • எடப்பாடிக்கு அங்கீகாரம்: டெல்லி மேலிடத்தின் ஆலோசனையின்படி, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்ததன் மூலம், அதிமுகவின் முழு நம்பிக்கையை கோயல் பெற்றார்.
  • பாமக மற்றும் பிற கட்சிகள்: அன்புமணி ராமதாஸின் பாமக, ஜி.கே.வாசனின் தமாகா மற்றும் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி என அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளைச் சுமுகமாக முடித்துள்ளார்.
  • முக்கிய உறுதிமொழி: தினகரனுக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படுவதோடு, ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தையும் வழங்க பியூஷ் கோயல் பாசிட்டிவ் சிக்னல் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்போது ஓ பன்னீர்செல்வமும் அவரின் "அண்ணன்" எடப்பாடியிடம் இறங்கி செல்ல முடிவெடுத்துவிட்டார்.

திமுகவிற்கு விடப்பட்ட நேரடி சவால்

பிரதமர் மோடி சமீபத்தில் மதுராந்தகத்தில் ஆற்றிய தேர்தல் உரையின் பின்னணியில் பியூஷ் கோயலின் கடும் உழைப்பு உள்ளது. "திமுகவின் ஊழல் ஆட்சிக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது" என பிரதமர் முழங்கியபோது, மேடையில் ஈபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அருகருகே அமர்ந்திருந்தது கோயல் செதுக்கிய அந்த ஒற்றுமையின் காட்சியாகவே பார்க்கப்பட்டது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பிரிக்கக்கூடிய வாக்குகளால் கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வாக்குகளைச் சிதறவிடாத ஒரு வலுவான தேர்தல் இயந்திரத்தை கோயல் கட்டமைத்துள்ளார். டெல்லி மேலிடம் கொடுத்த பணியைத் துல்லியமாக முடித்துவிட்டு, தற்போது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் பியூஷ் கோயல்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+