மக்களோட உயிருக்கு என்ன உத்தரவாதம்.. தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை கைவிடுங்க.. ஓ.பி.எஸ். சுளீர்
சென்னை: தீபாவளியை முன்னிட்டு தனியார் பேருந்துகளை இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும். தனியார் பேருந்துகளின் நிலைமை, ஓட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து தெளிவு இல்லாமல் தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது. அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அரசுப் பேருந்துகளை கூடுதல் எண்ணிக்கையில் இயக்கவும், தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் பேருந்துக் கட்டணத்தினை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது என்பது வழக்கமாக நடைபெறும் ஒன்று. ஆனால், இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது.

2021-2022 ஆம் ஆண்டிற்கான கொள்கை விளக்கக் குறிப்பில், 31-07-2021 அன்றைய நிலவரப்படி, 20,557 அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2021-22-ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையில், 1,000 பேருந்துகள் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 2213 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் வாங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
2023-24-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 1000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும், 500 பேருந்துகள் புதுப்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 500 மின்சார பேருந்துகள் உள்பட 3,000 பேருந்துகள் வாங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 7,213 பேருந்துகள், 1,000 மின்சார பேருந்துகள் என 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மானியத்திற்கான கொள்கை விளக்கக் குறிப்பில் 20,260 அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, 2021 ஆம் ஆண்டு இருந்த பேருந்துகளைவிட 2024 ஆம் ஆண்டு பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அப்படியென்றால், 8,213 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் இன்னும் காகித வடிவிலேயே இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
2024-25 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கையை கழித்தால்கூட, 4,713 பேருந்துகள் கூடுதலாக இருந்திருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலை வேறு மாதிரியாக இருக்கிறது. எத்தனை பேருந்துகள் கழிவு செய்யப்பட்டன, எத்தனைப் பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன என்ற விவரமும் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு அரசே தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகிறது என்றும், இதற்காக புதிய பேருந்துகளை வாங்கி, நிறுத்தி வைக்க முடியாது என்றும், கூடுதலாக ஊழியர்களை நியமிக்க முடியாது என்றும் தெரிவித்திருப்பதைப் பார்த்தால், அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு மூடுவிழா எடுக்க தி.மு.க. அரசு முடிவு செய்துவிட்டதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
இந்த நடைமுறை முறைகேடுகளுக்கு வழிவகுக்கும். இது மட்டுமல்லாமல், அரசிடம் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஓட்டுநர்கள் இல்லையோ என்ற சந்தேகமும் எழுகிறது. அரசின் கொள்கைக் குறிப்பின்படி, தனியார் வசம் 7,764 பேருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், மிகப் பெரிய நிறுவனங்களாக விளங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கப் போகின்றன என்பது நகைப்புக்குரியதாக உள்ளது.
தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இருக்க முடியாது. இது அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நீர்த்துப் போகச் செய்யும் ஒரு நடவடிக்கை. இது கடும் கண்டனத்திற்குரியது. மேலும், தனியார் பேருந்துகளின் நிலைமை, அந்த ஒட்டுநர்களுக்கு உள்ள அனுபவம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு இல்லாமல், தனியார் பேருந்துகளை எடுத்து இயக்குவது என்பது மிகவும் ஆபத்தானது.
எனவே, அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வசம் உள்ள அனைத்துப் பேருந்துகளையும் முழு வீச்சில் இயக்கி, மக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். தனியார் பேருந்துகளில் வசூலிக்கும் கட்டணத்தை கட்டுப்படுத்த வேண்டுமென்றும், அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளின் எண்ணிக்கை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு வாங்கப்பட்ட புதிய பேருந்துகளின் எண்ணிக்கை, புதுப்பிக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, கழிவு செய்யப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை, ஓட்டுநர்களின் எண்ணிக்கை குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications