ஆஹா.. ஆளுநர் பதவியா.. சட்டென ஓ பன்னீர்செல்வம் கொடுத்த ரியாக்சன்.. ப்பா கேப்பே கொடுக்கலையே!
பல பாஜக தலைவர்கள் இன்னும் சிபிஆருக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார்.
சென்னை: இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் இது தொடர்பாக முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் பாஜகவுடன் ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருகிறார். உதாரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக அதிமுக ஓபிஎஸ் அணியின் வேட்பாளராக செந்தில் முருகன் என்பவரை அவர்கள் தரப்பு களமிறக்கியது.
பாஜக சார்பாக வேட்பாளராக களமிறக்கப்பட்டால் எனது வேட்பாளரை வாபஸ் வாங்கிக்கொள்வேன் என்று ஓ பன்னீர்செல்வம் வெளிப்படையாக பேசினார். தனக்கு கிடைத்த இடங்களில், வாய்ப்புகளில் எல்லாம் ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் தன்னை நெருக்கமாக காட்டிக்கொண்டு உள்ளார்.

ஈரோடு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் நேரடியாக சென்று அண்ணாமலையை சந்தித்தது, அதன்பின் குஜராத்தில் பாஜக தலைவர்களை சந்தித்தது என்று ஓ பன்னீர்செல்வம் பாஜகவுடன் நெருக்கமாக இருந்தார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு நிறுத்திய வேட்பாளர் செந்தில் வாபஸ் வாங்கிய நிலையில், எடப்பாடி தரப்பு மட்டும் வேட்பாளரை இரட்டை இலை சின்னத்திற்கு கீழ் நிறுத்துகிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்காது என்பதால் ஓ பன்னீர்செல்வம் இந்த முடிவை எடுத்துள்ளார். இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளருக்கு பாஜகவும் ஆதரவு அளித்துள்ளது.

அண்ணாமலை
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக சட்டபூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், என்று கூறி உள்ளார். அதாவது எடப்பாடியை இடைக்கால பொதுச்செயலாளர் என்றும், ஓபிஎஸ்ஸை வெறும் அண்ணன் என்றும் அண்ணாமலை அழைத்துள்ளார். இதன் மூலம் பாஜக ஆதரவு எங்கே எடப்பாடிக்கு கிடைத்துவிட்டதோ என்று கேள்வி எழுந்துள்ளது.

பாஜக எடப்பாடி
பாஜக - எடப்பாடி நெருக்கமாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ள நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் முக்கியமாக ட்விட் செய்துள்ளார். ஆளுநர்கள் மாற்றம் குறித்து அவர் போஸ்ட் செய்துள்ளார். நாடு முழுக்க மொத்தம் 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் தற்போது நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக ட்விட் செய்துள்ள ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டைச் சேர்ந்த C.P.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவரது பணி சிறக்க எனது நல்வாழ்த்துகள், என்று கூறியுள்ளார்.

பாஜக வாழ்த்து
பாஜகவினரே இன்னும் சிபி ராதாகிருஷ்னனுக்கு தனது வாழ்த்தை தெரிவிக்கவில்லை. பல பாஜக தலைவர்கள் இன்னும் சிபிஆருக்கு வாழ்த்து சொல்லாத நிலையில் ஓ பன்னீர்செல்வம் முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார். பாஜகவுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை காட்டிக்கொள்ளும் விதமாக ஓ பன்னீர்செல்வம் இப்படி போஸ்ட் செய்துள்ளார். பாஜக - எடப்பாடி நெருக்கமாகி வருவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ள நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் இந்த போஸ்டை செய்து இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்க தொடங்கி உள்ளனர்.
-
மீஞ்சூரில் சூறையாடப்பட்ட மாணவி.. வாய் திறப்பாரா ஸ்டாலின்? உச்சகட்ட கோபத்தில் எடப்பாடி பழனிசாமி! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
அமித்ஷாவுக்கு டப்பிங் கொடுக்க வெக்கமா இல்லையா.. எடப்பாடியை வெளுத்து வாங்கிய சிதம்பரம் -
ஒன்னு கூடிட்டாங்க.. அஜித்துடன் ரஜினி! எடப்பாடிக்கு ஏகப்பட்ட ஹேப்பி! காத்திருந்த திண்டுக்கல் கிஃப்ட்! -
சம்பந்திக்காக சேராத இடம் சேர்ந்து.. வஞ்சத்தில் வீழ்ந்த எடப்பாடி! வஞ்சகன் மோடி! முத்தரசன் அட்டாக்! -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications