Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

10 நிமிடம்.. பிரதமர் மோடியை தனியாக சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்.. ஷாக்கில் எடப்பாடி..ஆஹா ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று பல்வேறு திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வம் நேரம் கேட்ட நிலையில் 10 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிரதமர் மோடி-ஓ பன்னீர் செல்வம் சந்திப்பை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.

சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று பச்சை கொடியசைத்து திறந்து வைக்க உள்ளார்.

O Panner Selvam will meet with PM Modi on 10 minits at Chennai Airport

இதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதரபாத்தில் இருந்து விமானத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று ஏராளமான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியே சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரம் கேட்டிருந்தனர். இருவருக்கும் நேரம் ஒதுக்கப்படாமலே இருந்தது. இதற்கிடையே தான் இன்று காலையில் புதிய தகவல் வெளியானது. அதாவது சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓ பன்னீர் செல்வமும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இருப்பினும் இருவருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு என்பது இரவு நேரத்தில் நடக்கிறது.

பிரதமர் மோடி அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மைசூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வர உள்ளார். இந்த வேளையில் இரவு 7.30 மணிக்கு போல் ஓ பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஷாக்காகி உள்ளனர்.

அதாவது ஓ பன்னீர் செல்வத்தை பிரதமர் மோடி தனியாக சந்திக்க மாட்டார் என அவர்கள் நினைத்த நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் அதிமுக நிலவரம், தமிழக அரசியல் களம், தனக்கு ஏற்பட்ட துயரம் பற்றிய விபரங்களை பிரதமர் மோடியிடம் கூற வாய்ப்புள்ளது.

முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம் இருந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் தற்போது சுமூகமான உறவு இல்லாத நிலை இருக்கிறது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனால் இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்று கவனிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+