10 நிமிடம்.. பிரதமர் மோடியை தனியாக சந்திக்கும் ஓ பன்னீர் செல்வம்.. ஷாக்கில் எடப்பாடி..ஆஹா ட்விஸ்ட்!
சென்னை: சென்னையில் இன்று பல்வேறு திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வம் நேரம் கேட்ட நிலையில் 10 நிமிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பாராத எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிரதமர் மோடி-ஓ பன்னீர் செல்வம் சந்திப்பை உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.
சென்னையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சென்னை விமான நிலையத்தை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். மேலும் சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று பச்சை கொடியசைத்து திறந்து வைக்க உள்ளார்.

இதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதரபாத்தில் இருந்து விமானத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று ஏராளமான திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை தனித்தனியே சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் நேரம் கேட்டிருந்தனர். இருவருக்கும் நேரம் ஒதுக்கப்படாமலே இருந்தது. இதற்கிடையே தான் இன்று காலையில் புதிய தகவல் வெளியானது. அதாவது சென்னை வரும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதல்வர் என்ற முறையில் ஓ பன்னீர் செல்வமும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் இருவருக்கும் தனித்தனியே நேரம் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேச ஓ பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி 10 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு என்பது இரவு நேரத்தில் நடக்கிறது.
பிரதமர் மோடி அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துவிட்டு மைசூரு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வர உள்ளார். இந்த வேளையில் இரவு 7.30 மணிக்கு போல் ஓ பன்னீர் செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு ஷாக்காகி உள்ளனர்.
அதாவது ஓ பன்னீர் செல்வத்தை பிரதமர் மோடி தனியாக சந்திக்க மாட்டார் என அவர்கள் நினைத்த நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது ஓ பன்னீர் செல்வம் அதிமுக நிலவரம், தமிழக அரசியல் களம், தனக்கு ஏற்பட்ட துயரம் பற்றிய விபரங்களை பிரதமர் மோடியிடம் கூற வாய்ப்புள்ளது.
முன்னதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர் செல்வம் இருந்த நிலையில் அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகி உள்ளார். மேலும் அதிமுக-பாஜக கூட்டணியில் தற்போது சுமூகமான உறவு இல்லாத நிலை இருக்கிறது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனால் இந்த சந்திப்பை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்று கவனிக்க தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
30+ தொகுதியில் போட்டி? தமிழகத்தில் பாஜக எந்தெந்த தொகுதிகளில் களமிறங்குகிறது.. வெளியான முக்கிய தகவல் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
ஆதரவாளர்களுடன் சரத்குமார் ரகசிய ஆலோசனை.. மீண்டும் உதயமாகிறதா சமக.. அதிர்ச்சியில் பாஜக -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு.. ஜான் குமாருக்கு மீண்டும் சீட்! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள்












Click it and Unblock the Notifications