ஓபிசி கிரிமிலேயர் வருமான வரம்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.. முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
சென்னை: சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது எனவும், ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஓபிசி கிரீமிலேயர் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் நீதிபதி ஆர் மகாதேவன் அமர்வு விசாரித்தது. அப்போது, சம்பள வருமானத்தை வைத்து மட்டுமே ஓபிசி பிரிவினரை வசதி படைத்தவர் என முடிவு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஓபிசி பிரிவினருக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. ஏனெனில், கிரீமிலேயர் பிரிவில் அவர்கள் தவறுதலாக சேர்க்கப்பட்டதாக கூறி பணி நியமனம் மறுக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தொழில் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் வருமானத்துடன் சம்பள வருமானத்தை ஒப்பிடகூடாது எனக்கூறி, சென்னை, டெல்லி, கேரளா ஆகிய மாநில ஐகோர்ட்கள், ஓபிசி பிரிவினருக்கு ஆதரவாக தந்த தீர்ப்புகளை உறுதி செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
நியாயமான உரிமைகள் கிடைக்கும்
ஓபிசி மக்களின் நீதிக்கான பல்லாண்டுப் போராட்டத்துக்கு மாபெரும் வெற்றி.. ஓபிசி கிரீமி லேயர் பிரிவினர் நிர்ணயம் தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இத்தீர்ப்பானது, கிரீமிலேயர் நிர்ணயத்தின்போது ஊதிய வருமானத்தையும் தொழில் அல்லது சொத்து மூலமாக ஈட்டும் வருமானத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது எனக் கூறியுள்ளது.
ஓபிசி மக்களின் நியாயமான உரிமைகள் கிடைக்காமல் போவதில் இருந்து பாதுகாக்கிறது. குடிமைப் பணித் தேர்வுகளுக்கான தகுதி வரையறை தொடர்பான உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை உறுதிசெய்துள்ளது. பல்வேறு துறைகளின் வேலைவாய்ப்புகளில் ஓபிசி மக்களுக்கு எதிராக இருந்த பாகுபாட்டை நிராகரித்திருக்கிறது. இட ஒதுக்கீடு என்பதே சமூகரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்களுக்கானது எனும் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
நிரப்பப்படாமல் உள்ளன
எனினும், இந்த வழக்கில் உண்மையாகவே பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினர் பலரின் நியாயமான உரிமையை மறுக்கும் நிலைப்பாட்டை NDA அரசு எடுத்து வாதாடியது. அது மட்டுமில்லாமல், முன்னேறிய வகுப்பினருக்கான பொருளாதார ரீதியான EWS இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து, இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படையாக அரசியலமைப்புச் சட்டம் வகுத்துத் தந்த வரையறையை மீறியது.
மண்டல் குழு அடிப்படையிலான இட ஒதுக்கீடு அமலுக்கு வந்து முப்பது ஆண்டுகளாகியும், நாட்டின் பல முன்னணி உயர்கல்வி நிறுவனங்களிலும் ஒன்றிய அரசுப் பணிகளிலும் பல ஓபிசி பணியிடங்கள் இன்றும் நிரப்பப்படாமலே உள்ளன.
அநீதிக்குத் தீர்வு காண வேண்டும்
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்தியத் தொகுப்பில் 27% ஓபிசி இட ஒதுக்கீட்டை உறுதிசெய்தது உள்ளிட்ட பலவற்றிலும் தி.மு.கழகம் சமூகநீதிக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வருகிறது. சமூகநீதிக்கான நம் போராட்டம் தொடரும்!
ஏற்கெனவே குடிமைப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தங்களுக்கான இடங்கள் மறுக்கப்பட்ட ஓபிசி தேர்வாளர்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, அரசியலமைப்பின் சமத்துவ நெறியோடு செயல்பட்டு, அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குத் தீர்வு காண வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.
-
என்னுடைய சகோதரருக்கே போன் போட்டு என் உத்தரவு பற்றி கேள்வி எழுப்புவதா? உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கோபம் -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
கிறிஸ்தவராக மாறினால் பட்டியல் ஜாதி அந்தஸ்து + உரிமை கிடையாது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்













Click it and Unblock the Notifications