தமிழகத்தில் புகைப்படம் இல்லாத பழைய சாதி சான்றிதழ் செல்லாதா? அதிகாரிகள் விளக்கம்
சென்னை: பழைய சாதி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் அதனை மாற்ற வேண்டும் என்றும், தமிழகத்தில் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் செல்லாது என்றும் சிலர் சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பி வருகிறார்கள். இது குறித்த அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் பிறப்பு சான்றிதழ், ஆதார், சாதி சான்றிதழ் இந்த மூன்றுமே பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும் போதே கேட்கிறார்கள். இதுஒருபுறம் எனில் வேலைவாய்ப்பு, உதவி தொகை போன்றவற்றுக்கும் சாதி சான்றிதழ் கட்டாயம் ஆகும். பள்ளியில் படிக்கும் போதே பலர் சாதி சான்றிதழை வாங்கி வைத்துள்ளனர். சாதி சான்றிதழின் அடிப்படையில் அரசு வேலைகளில் சேர முடியும். பிசி, எம்பிசி, எஸ்சி எஸ்டி என்று தமிழகத்திலும், பொது, ஓபிசி, எஸ்சி/ எஸ்டி என தேசிய அளவிலும் சாதி சான்றிதழ்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. எந்த சாதியாக இருந்தாலும் இந்த பிரிவுகளின் கீழ் வந்துவிடும்.

இந்நிலையில் சாதி சான்றிதழ்களில் புகைப்படம் இருந்தால் தான் செல்லுப்படியாகும் என்றும், புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ் செல்லுபடியாகாது என்றும் சிலர் தகவல்களை பேசி யூடியூப் மற்றும் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்தியாக பரப்பி வருகிறார்கள்.
இதை உண்மை என்று நம்பி, தமிழகத்தில் சில இ சேவை மையங்களில் புகைப்படம் இல்லாத சாதி சான்றிதழ்கள் செல்லுபடியாகாது என கூறியபடி, அதனை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிலர் மேற்கொண்டு வருகிறார்கள் . அதனால் புகைப்படம் இல்லாத ஜாதி சான்றிதழ்கள் சட்டபூர்வமானதா இல்லையா? என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் புகைப்படத்துடன் கூடிய சாதி சான்றிதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் வழங்கப்டுகிறது. விண்ணப்பதாரரின் புகைப்படம் மற்றும் QR கோடுடன் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முன் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களில் புகைப்படங்கள் எதுவும் இடம் பெற்றிருக்காது.

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி குறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கேட்டபோது, சில இ சேவை நிறுவன ஊழியர்கள் சாதி சான்றிதழ் குறித்த தவறான புரிதலை பெற்றிருக்கிறார்கள். மேலும் பழைய ஜாதி சான்றிதழ்களை ஆன்லைனில் மாற்றுவதற்கான எந்த ஒரு அறிவிப்பையும் நாங்கள் வெளியிடவில்லை. பழைய சாதி சான்றிதழ் கிழிந்திருந்தாலோ அல்லது தொலைந்து விட்டால் மட்டுமே புதிதாக விண்ணப்பித்து பெறலாம் மற்றபடி அதனை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை என்று கூறினார்கள். எனவே மக்களே சாதி சான்றிதழ் புகைப்படம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் செல்லும். எதையும் மாற்றுவதற்கு அலைய வேண்டாம்..
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications