சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்படுமா? வேகமாக குறையும் ஏரிகளின் நீர் மட்டம்.. அதிகாரிகள் விளக்கம்
சென்னை: கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், சென்னையில் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.. ஏரிகளில் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருவதால், குடிநீர் பஞ்சம் ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்..
சென்னையில் பொதுவாக கோடைக்காலங்களில் வெயில் அதிகமாக இருக்கும்..நிலத்தடி நீரை நம்பி இருப்போர் முதலில் பாதிக்கப்படுவார்கள். அதேநேரம் குழாய்களில் வரும் குடிநீரைத்தான் அப்போது மக்கள் வெகுவாக நம்பி இருப்பார்கள்.. மேலும் குழாய் இணைப்பு இல்லாத பகுதி மக்கள் லாரி தண்ணீரையே நம்பி இருப்பார்கள். இதுதான் வழக்கம்.

பொதுவாக நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தால், சென்னைக்கு அடுத்து வரும் கோடைக் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு வராது.. அந்த வகையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் முழுமையாக நிறைந்தது. இதன் உபரி நீர் ஊருக்குள் வந்து வெள்ளக்காடானது. 2015ஐ விடவும் அதிகமான பாதிப்பு சென்னை புறநகர் பகுதிகளில் ஏற்பட்டது.
இப்படியான மழை பெய்த காரணத்தால் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் ஏற்படாது என்றே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில் நீர்மட்டம், வெயில் காரணமாக வேகமாக குறைந்து வருகிறது.
இது ஒருபுறம் எனில், கடலூர் மாவட்டம் வீராணம் ஏர் நீர் இன்றி வறண்டு போய் விட்டது. சென்னையை பொறுத்தவரை செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண் ஆகிய ஏரிகளில் தண்ணீர் கொள்ளவு என்பது 13.22 டி.எம்.சி ஆகும். இந்த 5 ஏரிகளிலும் சேர்த்து மொத்தம் 8.4 டி.எம்.சி மட்டுமே தற்போது இருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டை விட 1½ டி.எம்.சி. குறைவாகவே தண்ணீர் இருக்கிறது.
தற்போது தினசரி குடிநீர் தேவைக்காக புழல் ஏரியில் இருந்து 189 கன அடியும், கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் இருந்து 15 கன அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 141 கன அடியும், பூண்டி ஏரியில் இருந்து 303 கன அடியும், சோழவரம் ஏரியில் இருந்து 546 கன அடியும் நீர் எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்களான மீஞ்சூரில் இருந்து 34.41 மில்லியன் லிட்டர், நெம்மேலி பழையது 72.64 மில்லியன் லிட்டர், புதியதில் 85.38 மில்லியன் லிட்டர் நீர் எடுத்து வினியோகம் செய்யப்படுகிறது.
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பல வீடுகளில் சரிந்து வருகிறது. இதுஒருபுறம் எனில் குடிநீரின் தேவையும் நாளுக்கு நாள் முன்பைவிட அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்த அதிகாரிகள், சென்னை மாநகருக்கு அடுத்த 8 மாதத்துக்கு தேவையான குடிநீர் இருக்கிறது. அச்சப்பட தேவையில்லை என்றார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications