பைக் டாக்சிக்கு தடை உள்பட 13 கோரிக்கை.. ஓலா, உபேர் ஓட்டுநர்கள் 2-வது நாளாக ஸ்டிரைக்.. பயணிகள் சிரமம்
சென்னை: 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஓலா, உபேர் வாடகை கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். ஒலா, உபேர் கார் ஓட்டுநர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஓலா, உபேர் போன்ற செயலிகளை பயன்படுத்தி வாடகை கார்களை புக் செய்து பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். ஓலா, உபேர் போன்ற நிறுவனங்கள் பீக் நேரங்களில் வாடகை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி விடுவதாக பயணிகள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதேபோல், பயணிகளின் புக்கிங்கை கார் டிரைவர்களுக்கு அலாட் செய்யும் இந்த நிறுவனங்கள் அதற்காக குறிப்பிட்ட அளவு கமிஷன் தொகையும் எடுத்துக்கொள்கிறது. இதுபோக தற்போது பைக் டாக்சிகளையும் ஓலா, ரேபிடோ போன்ற நிறுவனங்கள் அனுமதிக்கின்றன. இதனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் தான், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 16ம் தேதி முதல் 2 நாட்களுக்கு செயலியை நீக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக ஓலா, உபேர் ஓட்டுநர்கள் அறிவித்து இருந்தனர். இதன்படி, சென்னையில் நேற்று ஒலா, உபேர் கார் ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தம் காரணமாக குறைந்த ஓலா, உபேர் போன்ற செயலிகளில் புக் செய்து பயணம் செய்யும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ஏனெனில் வழக்கமாக சில நிமிடங்களில் புக்கிங் ஆகிவிடும் சூழலில் நேற்று பல நிமிடங்கள் பயணிகள் காத்திருந்து புக் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டு மூன்று முறை புக் செய்ய முயற்சித்தும் புக்கிங் ஆகவில்லை என்றும் பயணிகள் சிலர் ஆதங்கத்தை தெரிவித்து இருந்தனர். சமூக வலைத்தளங்களிலும் இது தொடர்பாக பயணிகள் பலரும் தங்கள் சிரமத்தை பதிவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தான் ஓலா, உபேர் கார் ஓட்டுநர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாக நீடிக்கிறது. மதுரை, திருச்சி, கோவையில் உள்ள இணை போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த ஓலா, உபேர் ஓட்டுநர்கள் திட்டமிட்டுள்ளனர். முன்னதாக ஓலா, உபேர் ஓட்டுநர்கள் குறித்து உரிமைக் குரல் ஓட்டுனர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.ஜாஹீர் உசைன் கூறுகையில்,
ஓலா, உபேர் செயலிகள் வாயிலாக முன்பதிவு செய்யப்படும் வாடகை வாகனங்களை முறைப்படுத்தும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். வாகனங்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதேபோல், ஆட்டோக்களுக்கு மீட்டர் வழங்க வேண்டும். பைக் டாக்சிகளை தடை செய்ய வேண்டும்.
சொந்த வாகனங்களை வாடகைக்கு அனுப்பினால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரமாக்க வேண்டும். வணிக வாகனங்களை இயக்க பேட்ஜ் உரிமம் பெற வேண்டாம் என்ற போக்குவரத்து துறை அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுவதாக கூறியிருந்தார்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications