தங்கமே தங்கம்! டோக்கியா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற குழந்தைளை உச்சி முகர்ந்த ராமதாஸ்
சென்னை: ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மூன்று குழந்தைளை பாமக நிறுவனர் ராமதாஸ் சூப்பராக வாழ்த்தி உச்சி முகர்ந்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டி தொடர்களில் இந்தியா இதுவரை ஒரே ஒரு வெள்ளி பதக்கம் மட்டுமே வென்றுள்ளது. மகளிருக்கான 49-கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே வீராங்கனையான மீராபாய் சானு வெள்ளிப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மூன்று குழந்தைளை பாமக நிறுவனர் ராமதாஸ் தங்கமே தங்கம் என்று வாழ்த்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், " தங்கமே தங்கம்!டோக்கியோ ஒலிம்பிக்கில் #streetskateboarding போட்டிகளில் தங்கம் வென்ற ஜப்பானின் 13 வயது குழந்தை மோமிஜி நிஷியா, வெள்ளி வென்ற பிரேசிலின் 12 வயது குழந்தை ரைசா லியால், ஜப்பானின் 16 வயது வெண்கல மங்கை நகாயாமா ஆகியோருக்கு வாழ்த்துகள்!" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications