தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி- சுகாதாரத் துறை
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. 600 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமல்
இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி வரும் 31-ஆம் தேதி முடிவெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரிசோதனை
ஓமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஓமிக்ரான் ஏற்படும் நிலை மாறி ஓமிக்ரான் தமிழகத்தில் சமூக பரவலாகி வருகிறது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் குணமடைந்து விட்டதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 11 பேரில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 7 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்த எண்ணிக்கை
திருவண்ணாமலை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications