தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி- சுகாதாரத் துறை
சென்னை: தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதியாகியுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுவரை தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு 45 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் ஓமிக்ரான் பரவல் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவி வருகிறது. 600 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமல்
இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி வரும் 31-ஆம் தேதி முடிவெடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையில், தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

ஓமிக்ரான் பரிசோதனை
ஓமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் ஓமிக்ரான் ஏற்படும் நிலை மாறி ஓமிக்ரான் தமிழகத்தில் சமூக பரவலாகி வருகிறது. ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் குணமடைந்து விட்டதாகவும் 16 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 11 பேருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த 11 பேரில் ஓமிக்ரான் பாதிக்கப்பட்ட 7 பேர் சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மொத்த எண்ணிக்கை
திருவண்ணாமலை, திருவாரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications