அல்லோகலப்படும் கோயம்பேடு பேருந்து நிலையம்! வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்படும் ஆம்னி பேருந்துகள்!
சென்னை: தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பிராட்வேயிலிருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையம் வந்தது. ஆனால் அங்கும் இடநெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கிளாம்பாக்கத்தில் பிரம்மாண்டமாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது.

இந்த பொங்கலுக்கு அங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. முதலில் தென் மாவட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு அதாவது பொங்கல் கழித்து அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
அது போல் அரசு விரைவு பேருந்துகள் எல்லாம் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முதல் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்தது. இதற்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
அதாவது கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை, போதிய கட்டமைப்புகள் இல்லை. எங்கள் பயணிகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர். தற்போது 2 நாட்களுக்கு முன்பு மொத்தமாக கிளாம்பாக்கம் செல்ல வேண்டும் என்றால் எப்படி, பயணிகளை எப்படி அலைக்கழிக்க வைக்க முடியும்.
அதற்குத்தான் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் செல்ல கால அவகாசம் கேட்டிருந்தோம் என கூறியிருந்தனர். ஆனால் அரசோ எங்கள் உத்தரவை மீறினால் குற்ற நடவடிக்கை பாயும் என போக்குவரத்து கழகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தைப்பூசம், குடியரசுத் தினம் என 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையிலான பயணிகள் முன் பதிவு செய்திருந்தனர். ஆனால் நேற்று ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டிலிருந்து இயக்க போக்குவரத்து கழகம் சார்பில் அனுமதி வழங்காததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் முதலே பதற்றமான சூழல் இருந்தது.
மாலை 5 மணிக்கு தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து பயணிகளுடன் இயக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆம்னி பேருந்துகள் வளாகத்தை சுற்றி 100 -க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அப்போது போலீஸாருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஓட்டுநர்களும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து தடுப்புகளை அமைத்து பேருந்து நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இரவு 7 மணி முதல் முன் பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல போலீஸாரும் அதிகாரிகளும் அறிவுறுத்தினர்.

பயணிகள் ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பயணிகள் குழப்பமடைந்தனர். அது போல் இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்தவர்களுக்கு முறையான அறிவுறுத்தல்கள் ஏதும் இல்லாததால் அலைக்கழிக்கப்பட்டனர். நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் அரசு பஸ்களில் ஏறிச் சென்றனர்.
இந்த நிலையில் ஒரு சில ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கும் எடுத்துச் செல்லப்பட்டன. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் கிளாம்பாக்கத்திலிருந்து சில ஆம்னி பேருந்துகள் புறப்பட்டு சென்றன. இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு கிளாம்பாக்கம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஆம்னி பேருந்துகள் பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டு சென்றன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications