தக்காளியை விடுங்க.. இந்த பச்சை மிளகாய் கெட்ட கேடு என்னா விலை விக்குது!.. வேறு எதெல்லாம் விலை உயர்வு
சென்னை: தக்காளி விலையை காட்டிலும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயின் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனால் இல்லத்தரசிகள் செய்வதறியாமல் விழிப்பிதுங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அது போல் துவரம் பருப்பின் விலையும் அதிகமாகவே உள்ளது. சிலிண்டர், பெட்ரோல் டீசல் உள்ளிட்டவைகளின் விலை அதிகமாகவே இருக்கிறது.

இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை கிலோ ரூ 100 க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் தக்காளி சாதத்தின் விலை அதிகரித்துள்ளது. பலர் தக்காளி இல்லாமல் எந்த உணவை செய்யலாம் என இன்டர்நெட்டில் தேடி வருகிறார்கள். இன்னும் சிலர் தயிர் சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், கொத்தமல்லி சாதம், புளி ரசத்தை சாப்பிட்டு மகிழ்கிறார்கள்.
சரி தக்காளியின் விலைதான் வரத்து இல்லாமல் அதிகரித்துள்ளது என பார்த்தால் இஞ்சி விலையும் அதிகரித்துவிட்டது. ஒரு கிலோ ரூ 300 க்கு விற்பனையானது. அது போல் வெங்காயத்தின் விலை ரூ 50 அதிகரித்து கிலோ 100 க்கு விற்பனையாகிறது. இந்த வெங்காயம் இதுவரை 4 கிலோ ரூ 100 க்கு விற்பனையானது.

அது போல் பச்சை மிளகாயின் விலையும் அதிகரித்துள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளான ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு வருகிறது. தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் சீசன் முடிந்துவிட்டது. கர்நாடகாவில் மட்டுமே பச்சை மிளகாய் சீசன் உள்ளது.
இதனால் பச்சை மிளகாய் வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து பச்சை மிளகாயின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் தொடக்கத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ 30க்கு விற்கப்பட்ட பச்சை மிளகாய் தற்போது 4 மடங்கு வரை விலை உயர்ந்து ரூ 400க்கு விற்கப்படுகிறது. இப்படி காய்கறிகளை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கு பதிலாக அசைவத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications