இனி காத்திருக்கவே வேண்டாம்.. அனைத்து கோவில்களிலும் ஆன்லைன் டிக்கெட்.. அறநிலையத்துறை அதிரடி திட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் இனி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடப்பதற்கும், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை இன்னும் ஓரிரு மாதங்களில் அமலுக்கு வரவுள்ளது.

Online Booking for Temple Darshan to Be Available Across Tamil Nadu Soon

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படவுள்ளது. அதன்படி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருச்செந்தூர் முருகன் கோயில், திருத்தணி முருகன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட 50க்கும் மேற்பட்ட கோயில்களில் ஆன்லைன் மூலம் சிறப்பு தரிசன டிக்கெட் திட்டத்தை கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரே நேரத்தில் பக்தர்கள் கோயில்களுக்கு வருவதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியும். மேலும் பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதையும் தடுக்க முடியும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தலின்படி, ஓரிரு மாதங்களில் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் பக்தர்கள் இனி கோவில்களில் நெடுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படாது.

விசேஷ நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோயில்களுக்கு வருவதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. ஆன்லைன் டிக்கெட் முறையில் குறிப்பிட்ட நேரக் கட்டுப்பாடு (Time Slot) ஒதுக்கப்படுவதால், ஒரே நேரத்தில் கூட்டம் கூடுவது தவிர்க்கப்பட்டு, கூட்டம் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

கோயில்களில் விரைந்து தரிசனம் செய்து வைப்பதாகக் கூறி பக்தர்களை ஏமாற்றும் இடைத்தரகர்களின் நடமாட்டம் மற்றும் சில இடங்களில் நிலவும் லஞ்சப் புகார்களுக்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கும். கட்டணங்கள் நேரடியாக அரசு கணக்கிற்கு ஆன்லைன் மூலம் செல்வதால் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.

முன்பதிவு செய்த நேரத்திற்குப் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றால் போதுமானது என்பதால், பல மணி நேரம் வெயிலிலும் மழையிலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய துயரம் பக்தர்களுக்கு இனி இருக்காது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

பக்தர்கள் தங்களின் ஆதார் அல்லது ஏதேனும் ஓர் அடையாள அட்டை விபரங்கள், மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு, தாங்கள் செல்ல விரும்பும் நாள் மற்றும் நேரத்தைத் தேர்வு செய்து சிறப்பு தரிசனக் கட்டணத்தைச் செலுத்தி டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கோயில் நுழைவாயிலில் இந்த டிக்கெட்டின் கியூஆர் கோடு (QR Code) ஸ்கேன் செய்யப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அனைத்துக் கோயில்களிலும் இதற்கான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்ட பிறகு, இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை முழுமையாக நடைமுறைக்கு வரும். டிஜிட்டல் மயமாகும் தமிழகக் கோயில்களின் இந்த புதிய நடைமுறை, ஆன்மீகப் பயணங்களை எளிமையாக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+