எய்ம்ஸ்க்கு ஒரே ஒரு செங்கல்.. 8 கோடி தமிழர்களை அவமானப்படுத்தும் மத்திய அரசு..கொந்தளித்த முதல்வர்
சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக பணம் ஒதுக்குகிறார்கள். சங்கத்தமிழுக்கு வெறுங்கையை நீட்டுவதா என்று மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் சாடியுள்ளார்.
சென்னை: மதுரையில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து விட்டு அதற்கு ஒரே ஒரு செங்கலை மட்டும் வைத்து விட்டு பல ஆண்டுகாலமாக தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து 8 கோடி தமிழர்களையும் மத்திய அரசு அவமானப்படுத்துவதாகவும் முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஆகியோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜகவிற்கு எதிராக உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இது எனது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட மேடை அல்ல, இந்திய அரசியலுக்கான புதிய தொடக்க விழா. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதே முக்கியம். பாஜகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஓரணியில் நிற்க வேண்டும். காங்கிரஸ் அல்லாத கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் வாதங்களை நிராகரிக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்து விட்டு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டி விட்டு இன்று வரை ஒரு செங்கலுக்கு மேல் வைக்காமல் தமிழ்நாட்டை கேவலப்படுத்திக்கொண்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. மொத்தமே 12 கோடி ரூபாய் மட்டுமே மதுரை எய்ம்ஸ்க்கு ஒதுக்கியிருக்கிறார்கள். இது 8 கோடி தமிழ்நாட்டு காரியமல்லவா என்று கேட்டார் முதல்வர் ஸ்டாலின்.

8 கோடி தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிகளால் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தனிப்பட்ட ஸ்டாலினை அவமானப்படுத்துவதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் மத்திய அரசு அவமானப்படுத்துகிறது. சமஸ்கிருதத்திற்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கி விட்டு சங்கத்தமிழுக்கு வெறும் கையை நீட்டுவதால் தமிழ்நாட்டு மக்கள் கொந்தளித்து போயிருக்கின்றனர் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications