சட்டசபை கூட்டத்தொடர் நிறைவு.. எம்ஜிஆர், ஜெ., நினைவிடங்களில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மலர்தூவி அஞ்சலி
Recommended Video
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
சட்டசபை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், அமைச்சர்களுடன் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் சென்றனர்.

இரு தலைவர்கள் நினைவிடங்களுக்கும் சென்ற முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும், மலர் வளையம் மற்றும் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் தங்களது தலைவர்களின் நினைவிடங்களை தொட்டு வணங்கினர்.
அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் தங்கள் தலைவர்களது நினைவிடங்களில் அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தினர்.

தமிழக சட்டமன்ற கூட்டம் கடந்த ஜூன் 28-ம் தேதி துவங்கி 16 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்தும் மானிய கோரிக்கைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு திட்டங்களையும் அறிவித்தார். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களில் 94 பேர் அனைத்து நாள்களும் அவைக்கு வந்துள்ளதாக சபாநாயகர் தனபால் தகவல் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார். சபாநாயகர் தனபால் வழக்கம் போல கூட்டத்தொடர் முடிந்ததும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் அமைச்சர்கள் புடை சூழ எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications