கர்நாடகா தேர்தல்: புலிகேசி நகரை அடுத்து ஓபிஎஸ் மேலும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்!!
சென்னை: கர்நாடகா சட்டசபை தேர்தலில் போட்டியிட மேலும் இரு வேட்பாளர்களை ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு வரும் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 224 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தலில் பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி காணப்படுகிறது.
இந்த நிலையில் கர்நாடகா தேர்தலில் போட்டியிட தங்களுக்கு புலிகேசி நகர் தொகுதியை ஒதுக்கித் தாருங்கள் என அதிமுக சார்பில் கேட்டதாக தெரிகிறது. ஆனால் பாஜகவோ அதிமுகவுக்கு தொகுதியை ஒதுக்காமல் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்துவிட்டது.

இதையடுத்து புலிகேசி நகர் தொகுதிக்கு எடப்பாடி பழனிசாமி சார்பில் நேற்றைய தினம் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். டி அன்பரசனை வேட்பாளராக அறிவித்தார். புலிகேசி நகர் தொகுதி தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதியாகும். இங்கு எப்படியும் வென்றே தீருவேன் என அன்பரசன் பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அதே தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு போட்டியாக ஓபிஎஸ்ஸும் வேட்பாளரை அறிவித்தார்.
அந்தத் தொகுதிக்கு கர்நாடகா மாநில மாணவர் அணிச் செயலாளர் எம். நெடுஞ்செழியன் அதிமுக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என ஓபிஎஸ் அறிவித்துள்ளார். இந்த நிலையில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில் மேலும் இரு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஓபிஎஸ் நிறுத்தியுள்ளார்.

கோலார் தங்க வயல் தொகுதியில் அனந்தராஜ், காந்தி நகர் தொகுதியில் குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். அனந்தராஜ் கர்நாடகா மாநில தலைவராக உள்ளார். கர்நாடகா மாநிலச் செயலாளராக இருந்து வருகிறார். புலிகேசி நகர் தொகுதியில் பாஜகவை சேர்ந்த முரளி போட்டியிடுகிறார். அதிமுக பொதுக் குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றமே அறிவித்துவிட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வாகி இருந்தாலும் கூட தேர்தல் ஆணையத்தில் அதிமுக பிரச்சினை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ் தன்னை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்றே அடையாளப்படுத்தி வருகிறார்.
தமிழகத்தில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவித்த தென்னரசுவுக்கு போட்டியாக செந்தில் முருகன் எனும் வேட்பாளரை ஓபிஎஸ் அறிவித்தார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டதற்கிணங்க ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற்றார். இந்த கோபத்தில் அந்த வேட்பாளர் ஓபிஎஸ் அணியிலிருந்து எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினார்.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
“விஜய்க்கு தகுதியும் இல்லை. தலைமைப் பண்பும் இல்லை”.. காட்டமாக விளாசிய சரத்குமார். -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
எப்பா தம்பிகளே! கொரோனாவுல உங்களுக்கு ஆல் பாஸ் போட்டது நான்தான்! அதிமுகவை மறக்கலாமா? இபிஎஸ் கலகல












Click it and Unblock the Notifications