மசியாத ஓபிஎஸ்! எடப்பாடிக்கு பறந்த பழனிச்சாமி?.. 3ஆவது நாளாக பரபரக்கும் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிரீன்வேஸ் சாலையில் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் மூன்றாவது நாளாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Recommended Video

    #AIADMK ஒற்றைத்தலைமை விவகாரம்..என்ன நடக்கிறது? #EPS #OPS

    அதிமுகவில் பொதுக் குழு கூட்டம் நடைபெறும் வரை ட்விஸ்ட்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் போல!. நேற்று முன் தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது முதல் இன்று வரை நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக எடப்பாடி தரப்பை சேர்ந்த ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

    ஓபிஎஸ் தரப்பு

    ஓபிஎஸ் தரப்பு

    ஆனால் இந்த தகவலை ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம் மறுத்துள்ளார். அப்படி ஒரு விவாதமே நடத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தவுடன் ஓபிஎஸ் வீட்டில் திடீர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    எடப்பாடி பழனிச்சாமி

    எடப்பாடி பழனிச்சாமி

    அது போல் நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி வீட்டிலும் ஓ பன்னீர் செல்வம் வீட்டிலும் தனித்தனியே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சென்னை உள்ளிட்ட இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதை எடப்பாடி தரப்பினர் கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது.

    மூன்றாவது நாள்

    மூன்றாவது நாள்

    இந்த நிலையில் இன்றைய தினம் மூன்றாவது நாளாக ஓபிஎஸ் வீட்டில் ஆலோசனை நடைபெறுகிறது. ஒற்றைத் தலைமை குறித்தா என்பது தெரியவில்லை. ஆனால் அதிமுக பொதுக் குழுவில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து விவாதிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஆலோசனைகள்

    ஆலோசனைகள்

    அது போல் அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுக் குழு தீர்மானங்கள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடினால்தானே அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவர், அது கூடாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை வாங்கினால் என்ன என்பது குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தி வருவதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின.

    வெறிச்!

    வெறிச்!

    ஆனால் இதை ஓபிஎஸ் தரப்பினர் மறுத்துள்ளனர். பொதுக் குழுவுக்கு தடை வாங்கும் எண்ணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். அதிமுகவில் இத்தனை பரபரப்புகள் நடைபெறும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமியோ சேலம் சென்றுவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஈபிஎஸ் வீடு தொண்டர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+