டிசம்பரில் அதிமுக பொதுக்குழு...? தீவிர ஆலோசனையில் ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்
சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது பற்றி அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஆலோசித்துள்ளார்களாம்.
கோவையை சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் சிக்கலாக திகழ்கிறாராம். அவர் தொடர்ந்த வழக்கு தான் அதிமுக தலைமைக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாம்.
இருப்பினும் கட்சியின் மூத்த முன்னணி நிர்வாகிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அடுத்த மாதம் பொதுக்குழுவை நடத்துவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

முக்கிய நிகழ்வு
அரசியல் கட்சிகளை பொறுத்தவரை பொதுக்குழு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள நிர்வாகிகள் தங்கள் மனக்குமுறலை கொட்டக் கூடிய இடமாக அது விளங்குகிறது. அதிமுகவில் ஜெயலலிதா இருந்தவரை பொதுக்குழு உறுப்பினர்கள் யாரும் வாய் திறந்து பேசியதில்லை. வெறுமனே கூட்டத்தில் கலந்துகொண்டு ஏற்கனவே வடிக்கப்பட்ட தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றும் சம்பிரதாய நிகழ்வு நடைபெறும்.

நிர்வாகிகள் பேச்சு
ஆனால் ஜெயலலிதா இல்லாமல் நடைபெறும் பொதுக்குழு என்பதால், நிச்சயம் அதிமுக நிர்வாகிகள் தங்கள் ஆதங்கத்தை இந்தக் கூட்டத்தில் கொட்டக் காத்திருக்கிறார்கள். இது தேவையற்ற தர்மசங்கடத்தை ஏற்படுத்திவிடக் கூடாது என நினைக்கும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., பொதுக்குழுவுக்கு முன்பாகவே நிர்வாகிகளை எப்படி கட்டுப்படுத்துவது என யோசனையில் உள்ளார்களாம்.

பொதுக்குழு திட்டம்
அதிமுக பொதுக்குழுவை ஜெயலலிதா இருந்தவரை டிசம்பர் மாதம் இறுதியில் தான் நடத்துவார். புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்பாக நடத்திவிட்டு, நிர்வாகிகளுக்கு புத்தாண்டு, பொங்கல் வாழ்த்தை கூறி அனுப்பி வைப்பார். இப்போது, அதேபாணியில் புத்தாண்டு நெருக்கத்தில் பொதுக்குழுவை நடத்த முதலில் திட்டமிடப்பட்டதாம். பின்னர் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் உள்ளதால் முன்கூட்டியே பொதுக்குழுவை நடத்தி முடித்து விடலாம் என ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். நினைக்கிறார்களாம்.

பொதுக்குழு குழப்பம்
அதிமுக பொதுக்குழு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றதோடு சரி, அதன்பின்னர் 2018-ம் ஆண்டு பொதுக்குழு நடத்தப்படவில்லை. இந்த ஆண்டும் இன்னும் பொதுக்குழு நடத்துவது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இருப்பினும் அது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டுள்ள கட்சித் தலைமை, டிசம்பரில் நிச்சயம் பொதுக்குழு தேதியை அறிவிக்கும் என்கிறார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications