மாநிலம் முழுவதும் தனியாக நிர்வாகிகளை நியமிக்கிறார்..ஓபிஎஸ்க்கு ஷாக் கொடுத்த அதிமுக வாதம்
சென்னை: அதிமுகவுக்கு உரிமை கோரி ஒருபக்கம் சட்ட போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ், இன்னொரு பக்கம் தனியாக கட்சி நிர்வாகிகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் நியமித்து வருகிறார். ஓபிஎஸ்சின் இந்த செயலை சுட்டிக்காட்டி அதிமுக தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு இன்று பிற்பகலில் விசாரணை தொடங்கியுள்ளது.

இந்த வழக்கில் ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், இன்று அதிமுக, எடப்பாடி தரப்பு வாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மூத்த வழக்கறிஞர் சிஎஸ் வைத்தியநாதன் வைத்த வாதத்தில், கட்சி விதிகளை மீறினால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எம்.எல்.ஏவாக செயல்படுவதில் இருந்து மனுதாரர்களுக்கு எப்படி பாதிப்பை ஏற்படுத்தியது என்பது விளக்கப்படவில்லை. தனியார் நிர்வாகிகளை நியமித்து வரும் ஓபிஎஸ் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும் எனத் தெரியவில்லை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரத்தை விட உச்சபட்ச அதிகாரம் கொண்டது பொதுக்குழு. கட்சி விதிப்படி, கட்சி விவகாரங்கள் தொடர்பாக பொதுக்குழு எடுக்கும் முடிவுகளே இறுதியானது. கட்சியின் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களை மட்டுமே பொதுக்குழு தீர்மானிக்க முடியும் என்பதல்ல. ஒழுங்கு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரம் உள்ளது" என்று கூறப்பட்டது.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் பல்வேறு பொறுப்புகளுக்கு ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இது தொடர்பாக அவ்வப்போது அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தான் ஓ பன்னீர் செல்வம் தனியாக கட்சி நிர்வாகிகளை நியமித்து வருவதையே சுட்டிக்காட்டி அதிமுக தரப்பு அவருக்கு எதிரான வாதமாக முன்வைத்துள்ளது.
-
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
பிரச்சார வாகனத்தால் பறிபோன எம்.எல்.ஏ பதவி? - ஜெயலலிதாவுக்கு எதிராக பி.ஹெச்.பாண்டியன் செய்த சம்பவம்! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
டூவீலரில் மோதிய எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு வாகனம்.. 28 வயது இளைஞர் உயிரிழப்பு.. பெரும் சோகம் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?












Click it and Unblock the Notifications