"ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் ஓபிஎஸ் ஆதரவு தேவை" இல்லன்னா கஷ்டம் தான்.. அடித்து சொல்லும் புள்ளி
சென்னை: ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு கண்டிப்பாக தேவை என்றும் இல்லையென்றால் தோற்க கூட வாய்ப்பு உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியின் விவரங்களை பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. சரியாக சொல்வது என்றால் இன்னும் 10 மாதங்கள் கூட இல்லை. தேர்தல் நெருங்க தொடங்கியிருப்பதால் தற்போதே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது. இது ஒருபக்கம் இருக்க பிரதமர் மோடி, ராமநாதபுரத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவே பல மாதங்களாகே அரசியல் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் , ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று அண்மையில் பேசியிருந்தார். போதாக்குறைக்கு தனது நடைபயணத்தை ராமநாதபுரத்தில் இருந்துதான் அண்ணாமலை தொடங்கினார். இதுவும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. ஆனால், அதேவேளையில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடிக்கான வெற்றி வாயுப்பு எப்படி இருக்கும் என்ற ஒரு விவாதமும் எழாமல் இல்லை.
பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் அவருக்கு முன்னள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவு கண்டிப்பாக தேவை எனவும் இல்லாவிட்டால் பிரதமர் மோடி தோற்க கூட வாய்ப்பு உள்ளது என்று மூத்த பத்திரிகையாளாரான பிரியன் தெரிவித்துள்ளார். ஒன் இந்தியா அரசியல் யூடியூப் தளத்திற்கு ப்ரியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பான்மை பொதுக்குழு ஆதரவு உள்ளது. இருந்தாலும் எடப்பாடிக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறதா என்பது வரும் தேர்தலில் தான் தெரியவரும். குறிப்பாக தெற்கு பகுதிகளிலும்...டெல்டா பகுதிகளிலும்... அந்த விஷயம் பாஜகவிற்கும் நன்றாகவே தெரியும். அதனால்தான் பன்னீர் செல்வத்தையும் விட முடியவில்லை.. ஒபிஎஸ் மூலமாக டிடிவி தினகரனையும் அவர்களால் (பாஜக) விட முடியாது.
பாஜகவை பொறுத்தவரை இரட்டை இலை வோட்பேங் அல்லது அதிமுக வாக்கு வங்கியை எப்படியாவது பயன்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான பாயிண்டாக உள்ளது. அதில் ஒரு போர்ஷனை விட்டால் கூட பிரச்சினை வரும்... பன்னீரையும் டிடிவியைவும் ஒதுக்கிவிட்டு எடப்பாடியை கூப்பிட்டதால் கோடநாடு விவகாரத்தை இரண்டு பேரும் ஒன்றாக கையில் எடுத்தார்கள்.
அதில் எதாவது எடப்பாடிக்கு சிக்கல் வந்தால் கட்சி நம்ம கிட்ட வரும் என்பது ஒரு பாயிண்ட்.. இன்னொரு பாயிண்ட் என்னவென்றால் இது மாதிரி ஒரு அழுத்தம் கொடுத்தால் பாஜக நம்மை தேடி வரும்.. மீண்டும் ஒரு தொடர்பு ஏற்படும் என்பதற்காக கையில் எடுத்தார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் கொடுத்த பிரஷர் நடந்து இருக்கிறது. ஏனென்றால் அடுத்த நாள் அண்ணாமலை சொல்வது மூலமாக அவர்கள் கொடுத்த பிர்ஷர் வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.
ஏன் இன்னும் ஃபர்தராக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது என்றால்... இப்போ ராமநாதபுரத்தில் மோடி நிற்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்களேன்... அவர் ராமநாதபுரத்திலும் நிற்கிறார்... காசியிலும் நிற்கிறார்.. ராமநாதபுரம் என்றால் ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரத்தில் மோடி போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்..
நீங்கள் டிடிவி, ஓ பன்னீர் செல்வம் ஆதரவு இல்லாவிட்டால் கடுமையான போட்டியை சந்திக்க வாய்ப்பு உள்ளது.அதானால், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோற்க கூட வாய்ப்பு இருக்கு.. அந்த தொகுதி மட்டும் இல்லை.. விருதுநகர், தென்காசி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் டிடிவி, பன்னீர் செல்வம் ஆதரவு இல்லை என்றால் எடப்பாடி, பாஜக அணி தோல்வி அடைய வாய்ப்பு ள்ளது.
அதனால், இவர்களுக்கு புரிகிறது..புரியாமல் இல்லை.. ஆனால், எடப்பாடி ஒருபக்கம் அழுத்தம் கொடுக்கிறார். கட்சி அமைப்பு அவரிடம் இருப்பதால் அவருடைய பிரஷரையும் தாங்க முடியவில்லை. அவரையும் விட முடியவில்லை. பன்னீரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அவர் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் இருக்கிறார். மோடிக்கு ஆதரவாளராக இருக்கிறார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications