தாய்ப் பத்திரம்.. பட்டா நிலம்.. முந்தைய அசல் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே பத்திரப்பதிவு: பதிவுத்துறை
சென்னை: ஆவணங்கள் பதிவு செய்யும்போது, சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள அதிகாரப்பூர்வ பதிவுகளுடன் ஒப்பிடப்பட வேண்டும். முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பிறகே ஆவணத்தை பதிவு செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவு அலுவலர்கள் நிவர்த்தி செய்த பிறகு பதிவு செய்யலாம் என பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
சொத்து விற்பனை தொடர்பான பத்திரம் பதியும்போது, முந்தைய அசல் ஆவணம், அதாவது மூலப்பத்திரம் தாக்கல் செய்வது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு சட்டத்தில் 55A என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டது.

இதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம்கோர்ட், இப்புதிய பிரிவை பயன்படுத்த தடை விதித்தது. பதிவு சட்டத்திற்கு முரணாக அமைந்துள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பதிவு சட்டத்தில் மோசடியை தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, புதிய சட்டத்திருத்த மசோதாவை, பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டசபையில் 4 நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்தார்.
மூலப்பத்திரம் - அசல் ஆவணம்
முந்தைய ஆவணங்கள் மற்றும் பதிவுகளை முறையாக சரிபார்த்த பின்னரே ஆவணத்தை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பதிவு அலுவலர்கள் நிவர்த்தி செய்த பிறகு பதிவு செய்யலாம் என்றும் தற்போது பத்திர பதிவுத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், பத்திரப்பதிவுத்துறை ஆணையர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ஒரு பத்திரம் பதிவுக்காக சார் - பதிவாளரிடம் தாக்கல் செய்யப்படும் போது, அதற்கு, 10 நாட்களுக்கு முன் பெறப்பட்ட வில்லங்க சான்றிதழ், அந்த சொத்துக்கான மூலப்பத்திரமான அசல் ஆவணம் போன்றவற்றை தாக்கல் செய்ய வேண்டும். இதுபோன்று, முந்தைய அசல் ஆவணம் இல்லாத நிலையில், அந்த பத்திரத்தை பதிவு செய்யக்கூடாது.அந்த சொத்து அடமானம் வைக்கப்பட்டு இருந்தால், அடமானம் பெற்றவரிடம் இருந்து, தடையில்லா சான்று பெற்று தாக்கல் செய்ய வேண்டும்
முந்தைய அசல் ஆவணம்
மூதாதையர் சொத்தாக இருந்து, அதற்கு மூலப்பத்திரம் இல்லாத நிலையில், வருவாய் துறையில் வழங்கப்பட்ட பட்டா சமர்ப்பிக்கப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்.
முந்தைய அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அதுகுறித்து உள்ளூர் நாளிதழில் வெளியிடப்பட்ட விளம்பரம், காவல் துறையினர் வழங்கிய, 'கண்டறிய முடியவில்லை' என்ற சான்றிதழ் தாக்கல் செய்யப்பட்டால் மட்டுமே, பத்திரப்பதிவு மேற்கொள்ளப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 விதமான அறிவிப்பு - குழப்பம்?
இதனிடையே, இரு வகையான சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருப்பதால் சில குழப்பங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.. காரணம், பதிவு சட்டத்தின், 55A பிரிவை எதிர்த்து மீண்டும் ஒருவர் தொடர்ந்த வழக்கை, சமீபத்தில் விசாரித்த சுப்ரீம் கோர்ட் இப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. ஆனால் இப்போது, சொத்து பதிவுக்கு மூலப்பத்திரம் கட்டாயம் என, புதிதாக சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நிறைவேறியிருக்கிறது..
இந்த இரு வேறு சுற்றறிக்கைகள் குழப்பத்தை உண்டு பண்ணி வருவதாக தெரிகிறது. சட்டசபையில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது என்றாலும் இது சட்டமாகவில்லை.. எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க, பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் அமலுக்கு வரும் போது, எதை பின்பற்ற வேண்டும் என்பதை, அதிகாரிகள் தெளிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
-
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications