EC வைத்த அடுத்த ஆப்பு..12.43 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்! காலியாகும் ஓட்டு? மாவட்ட வாரியாக லிஸ்ட்
சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வரும் நிலையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், இல்லையென்றால் அவர்களுடைய பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதியாக வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று படிவங்களை வழங்கினர்.
அந்தப் படிவங்கள் திரட்டப்பட்ட பிறகு, டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எஸ்ஐஆர் தொடங்குவதற்கு முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது வெளியான வரைவு பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.

தேர்தல் ஆணையம்
அதாவது, மொத்தமாக 97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. தேவையான ஆவணங்கள் இல்லாமை, இரட்டை பெயர்கள், முகவரி மாற்றம் போன்ற காரணங்களால் இந்த நீக்கங்கள் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், புதிய வாக்காளர்களைச் சேர்க்கும் பணி ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறும். அனைத்து திருத்தப் பணிகளும் முடிந்த பிறகு பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியல் திருத்தம்
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பினும், சில விவரங்கள் சரியாக இல்லாததால், தமிழகம் முழுவதும் 12.43 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் அதிகமானோர் சென்னை, திருவள்ளூர், கோவை போன்ற மாவட்டங்களில் உள்ளனர். சென்னையில் மட்டும் 2.37 லட்சம் பேருக்கும், திருவள்ளூரில் 1.85 லட்சம் பேருக்கும், கோவையில் 1.10 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் சென்றுள்ளது. எஸ்ஐஆர் படிவங்களில் குறிப்பாக 2002 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளுக்கு தொடர்புடைய குடும்ப விவரங்கள் அல்லது உறவினர் விவரங்கள் சரியாக வழங்கப்படாதது காரணமாக இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
12.43 லட்சம் நோட்டீஸ்
மேலும் ஒரே வீட்டில் ஒரே பெயர் மீண்டும் மீண்டும் வருதல், பெயருடன் முகவரி பொருந்தாமல் இருப்பது போன்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள இடங்களிலும் இதுபோன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் பெற்றவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 13 அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொண்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி அலுவலரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும். அந்தச் சந்திப்பில் வாக்காளர் விவரம் சரியாக உள்ளதா இல்லையா என்பதை அலுவலர் உறுதி செய்து பதிவு செய்வார். ஆனால் நோட்டீஸ் வந்தும், அலுவலரை சந்திக்காமல் இருந்தால், அவர்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை வாக்காளர்கள்
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் அரியலூரில் 6,439, செங்கல்பட்டில் 63,373, சென்னையில் 2,37,619, கோவையில் 1,10,984, கடலூரில் 46,191, தர்மபுரியில் 2,852, திண்டுக்கல்லில் 2,926, ஈரோட்டில் 46,400 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது
தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
இதேபோல கள்ளக்குறிச்சியில் 12,794, காஞ்சிபுரத்தில் 56,479, கன்னியாகுமரியில் 8802, கரூரில் 7931, கிருஷ்ணகிரியில் 24,022, மதுரையில் 16,201, மயிலாடுதுறையில் 14,788, நாகப்பட்டினம் 4493, நாமக்கல்லில் 14,577, பெரம்பலூரில், 4,561 புதுக்கோட்டையில் 33,374, ராமநாதபுரத்தில் 16,082, ராணிப்பேட்டையில் 17,860,
சேலத்தில் 26,463, சிவகங்கை 6,189, தென்காசியில் 12,021, தஞ்சாவூரில் 21,371, நீலகிரியில் 11981 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
திருப்பூரில் 21,571
அடுத்ததாக தேனியில் 12,572, திருவள்ளூரில் 1,85,987, திருவாரூரில் 4,851, தூத்துக்குடியில் 13,569, திருச்சியில் 53,146, திருநெல்வேலியில் 15,223, திருப்பத்தூரில் 15,961, திருப்பூரில் 21,571, திருவண்ணாமலையில் 15,465, வேலூரில் 19,827, விழுப்புரத்தில் 15,720, விருதுநகரில் 16,418, என்ன மொத்தம் தமிழகம் முழுவதும் 12,43,363 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
-
கோடை மழைக்கு எண்ட் கார்டு.. வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இனிதான் சம்பவம் இருக்கு -
கோலாட்டம் ஆடிய மாணவியின் வாயில் ’விசில்’.. அத்தனை பேர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி செய்த செயல்! -
கழகங்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய சுயேச்சைகள்! 2021 சட்டமன்ற தேர்தல்.. டாப் 10 இவுங்கதான்.. ரிவைண்ட் -
போடு..அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம் -
1-9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு! கோடை விடுமுறை தேதி அறிவிப்பு -
அசத்தி காட்டிய தமிழ்நாடு.. ஐடியா கேட்டு வந்த உத்தரப் பிரதேசம்! வழிகாட்ட நம்ம ரெடி! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications