Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்ன அதுக்குள்ள காணோம்.. நொடியில் காலியாகும் ரயில் டிக்கெட்டுகள்! ரயில்வே எடுத்த முக்கிய முடிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரயில்களுக்கான முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கிய நிலையில் சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் 150க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பொங்கல் பண்டிகையன்று சொந்த ஊரில் வழிபாடு நடத்துவது தமிழர்களின் பாரம்பரியம்.

குறிப்பாக தமிழகத்தின் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றும் மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து ஆண்டுதோறும் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பார்கள்.

Pongal Train irctc

பொங்கல் சிறப்பு ரயில்

குறிப்பாக ரயில் மூலம் மட்டுமே 7 லட்சத்திற்கும் அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதை அடுத்து பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. வழக்கமாக 60 நாட்களுக்கு முன்பு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அந்த வகையில் கடந்த 11ஆம் தேதியிலிருந்து பொங்கல் பண்டிகைக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி இருக்கிறது. ஆனால், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தெற்கு ரயில்வே அறிவிப்பு

இதனையடுத்து பொங்கலுக்கு கூடுதல் ரயில்கள் மற்றும் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகள் இடையே எழுந்தது. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் உள்பட முக்கிய வழித்தடங்களில் 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த தீபாவளியைப் போல, இந்த பொங்கலிலும் பயணிகள் நெரிசல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், முன்கூட்டியே திட்டமிட்டு ரயில்வே தயார் நிலையில் உள்ளது.

150 சிறப்பு ரயில்கள்

சென்னை மண்டலத்தை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் மொத்தம் ஆறு கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் தினமும் சுமார் 1000 ரயில்கள், அதில் 170 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால், சிறப்பு ரயில்கள் இயக்குவது தெற்கு ரயில்வேயின் வழக்கமான நடைமுறையாகும். கடந்த தீபாவளி காலத்தில் மட்டும் சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள், கோவை, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

2025 தைப்பொங்கல்

இரண்டு வாரங்களுக்கு இயக்கப்பட்ட அந்த சிறப்பு ரயில்களில் மட்டும் 2.5 லட்சம் பயணிகள் பயணித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வரும், 2025 தைப்பொங்கல் ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதிலும் இருந்து மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் சூழ்நிலையில், கூட்டநெரிசலை குறைக்க தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது. அனுமதி கிடைத்ததும், சென்னை மற்றும் திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில்கள் டிசம்பர் 15 முதல் இயக்கப்படும்.

சென்னை மதுரை ரயில்

இதனால் சென்னை - மதுரை, சென்னை - திருச்சி, சென்னை - நெல்லை, சென்னை - கோவை, சென்னை - இராமேஸ்வரம், சென்னை - தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் ரயில்களுக்கு மட்டுமல்லாமல், ஜனவரி 16 முதல் மீண்டும் சென்னை மற்றும் முக்கிய நகரங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு பயணிகள் அதிகளவில் திரும்புவதால், அந்த வாரத்திலும் கூடுதல் ரயில்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+