ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க.. செம திட்டம்.. தமிழ்நாடு அரசு உருவாக்கிய புதிய ஆக்சிஜன் ஆணையர் பதவி
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா 3ம் அலை பரவலின் போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் ஆணையர் என்ற புதிய பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. தினசரி கேஸ்கள் கடந்த 3 நாட்களாக 2 ஆயிரத்திற்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் 1,891 கேஸ்கள் மட்டுமே பதிவாகின.
தமிழ்நாட்டில் தற்போது நிலவரப்படி 26,158 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே உள்ளது. மூன்றாம் அலை பாதிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தாலும் தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது.

மூன்றாம் அலை
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மூன்றாம் அலை கொரோனா பரவல் தாக்கினால் அப்போது பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் இதற்காக உயர்த்தப்பட்டுள்ளது. அதோடு மாவட்ட அரசு மருத்துமனைகளிலேயே பல இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

வெளி மாவட்டம்
இதனால் ஆக்சிஜன் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி ஊர்களில் இருந்தும் வரும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு தற்போது புதிதாக ஆக்சிஜன் தேவையை கண்காணிக்க, ஆக்சிஜனை முறையாக மாவட்டங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் வழங்க ஆக்சிஜன் ஆணையர் என்ற பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

விரைவில் நியமனம்
இதற்கான ஆணையர் விரைவில் நியமிக்கப்படுவார். இவர்தான் இனி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பயன்பாடு குறித்து முடிவுகளை எடுப்பது, உத்தரவுகளை வெளியிடுவது போன்ற பணிகளில் ஈடுபடுவார். இந்தியாவில் முதல்முறை மாநிலம் ஒன்றில் இப்படி ஒரு பொறுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு ஆக்சிஜன் படுக்கைகள் தற்போது தமிழ்நாடு 80,000 என்ற அளவில் தயார் நிலையில் உள்ளது.

மெட்ரிக் டன்
அதோடு ஏற்கனவே ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதன் அளவு உயர்த்தப்படும். இதனால் உடனடி ஆக்சிஜன் தேவை ஏற்பட்டால் அதை சமாளிக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications