பெரியாரிசத்தை ஒழிப்பேன் என்பதா? மோடியை தலைவராக ஏற்றதா?- பாஜக, அதிமுக மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்
சென்னை: தந்தை பெரியார் ஒழிக்கத்தான் பாஜக இங்கு வந்திருக்கிறது என பாஜக தலைவர்களில் ஒருவரான தேஜஸ்வி சூர்யா பேசியிருப்பதற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஒரு காலத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் என ஊர்தோறும் பிரசாரம் செய்தது பாஜக. ஆனால் பாஜகவின் இந்த பிரசாரம் போணியாகவில்லை. படுதோல்வியைத்தான் தந்தது.
இதனால் இந்த முறை வேறுவழியே இல்லாமல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதனால் திராவிட எதிர்ப்பு முழக்கத்தை தமிழக பாரதிய ஜனதா கட்சியால் தைரியமாக முன்வைக்க முடியவில்லை.

பெரியாரிசத்தை ஒழிப்போம்
ஆனால் வெளியில் இருந்து வரும் இந்துத்துவா தலைவர்கள் அப்பட்டமாக தந்தை பெரியார், திராவிடர் இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கின்றனர். இதில் ஒன்றுதான் தேஜஸ்வி சூர்யா என்பவர், பெரியாரிசத்தை ஒழிக்கவே தமிழகத்துக்கு பாரதிய ஜனதா கட்சி வந்திருக்கிறது. தேஜஸ்வி சூர்யாவின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சிதம்பரம் கண்டனம்
இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தமிழ்நாட்டில் 'பெரியாரிசம்' (பெரியார் கொள்கையை) ஒழிக்கவே பாஜக இங்கு வந்திருக்கிறது என்று பாஜக தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன் 'சனாதன தர்மம்' என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார்.
|
தமிழர் தன்மானம் மீட்டவர்
தமிழ் நாகரிகத்தையும் தமிழர் தன்மானத்தையும் மீட்டவர் தந்தை பெரியார். காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமுதாய விடுதலை மற்றும் சமூக நீதியைப் பெற்றுத் தந்தவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜ் மற்றும் பேரறிஞர் அண்ணா.

ஈபிஎஸ்-ஓபிஎஸ் கட்சி தலைவர் மோடியா?
தான் ஒரு திராவிடக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் அஇஅதிமுக பாஜக தலைவரின் பேச்சை ஏன் கண்டிக்கவில்லை? தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?. இவ்வாறு ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
ராம ஸ்ரீனிவாசனை கடைசி நேரத்தில் கைவிட்ட நயினார்.. பிரச்சாரத்திற்கு வராமல் எஸ்கேப்பான பாஜக தலைமை! -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம் -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications