கொரோனா பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது.. ப. சிதம்பரம் திட்டவட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தொற்று நோய் பரவுவதை பாரதிய ஜனதா அரசால் தடுக்க முடியாது என்று மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் ப. சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது:

P Chidambarams dares Centre on Coronavirus row

கொரோனா தொற்று பரவுவதை பாஜக அரசால் தடுக்க முடியாது. காரணம், அரசின் நிர்வாக இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது, இதைச் செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் பல மாநிலங்களில் கிடையாது அல்லது அதிகாரங்களில்லாமல் இருக்கின்றன. ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது. அரசு என்ன செய்யப் போகிறது?

நேற்று கொரோனா தொற்று 4675 பேருக்குப் பரவியது. தற்காப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு மனிதரும் மேற்கொண்டு தொற்றுலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி

P Chidambarams dares Centre on Coronavirus row

முன்னணி தொழிலதிபர்கள் திரு அசீம் பிரேம்ஜியும் திரு வேணு சீனிவாசனும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையை ஆதரித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் புலம் பெயர்ந்து வீடு திரும்பும் தொழிலாளருக்கும் மாதம் ரூ 5000-7000 என்று மூன்று மாதங்களுக்குத் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இவ்வாறு ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+