சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்
Recommended Video
சென்னை: சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்து வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் பி.எச். பாண்டியன்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பி.எச். பாண்டியன். எம்ஜிஆர். ஜெயலலிதா, ஓபிஎஸ் காலங்களில் அதிமுகவின் முன்னணி தலைவராக விளங்கியவர்.
1960களின் இறுதியில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது ஆளவந்தார் கொலை வழக்கு. இக்கொலை வழக்கை நடத்திய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியராக பணியில் சேர்ந்தார் பி.எச். பாண்டியன். பின்னர் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக இருந்த .ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி ஆகியோரிடமும் ஜூனியராக பணியாற்றியவர் பி.எச் பாண்டியன்.

சபாநாயகராக பாண்டியன்
பின்னர் எம்.ஜி.ஆர் .அதிமுகவை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். 1977, 1980, 1984-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 1985-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் சபாநாயகராக பி.எச். பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

விகடன் கார்ட்டூன் விவகாரம்
1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் சட்டசபையை விமர்சிக்கும் வகையில் அட்டைப்பட கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்து விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார் சபாநாயகர் பி.எச். பாண்டியன்.

பி.எச்.பாண்டியன் உத்தரவு
இதனடிப்படையில் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பி.எச். பாண்டியன், அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்க அவரை 3 மாதம் சிறையில் அடைக்க பி.எச். பாண்டியன் உத்தரவிட்டார்.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பி.எச். பாண்டியனின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற முடியாது என்றார் பி.எச். பாண்டியன். அப்போதுதான், தாம் சட்டசபைக்கு சபாநாயகர்; நீதிமன்றத்தை விட வானளாவிய அதிகாரம் தமக்கு இருக்கிறது என பிரகடனம் செய்தார் பி.எச் பாண்டியன்.

இன்றும் பிஎச் பாண்டியன் பிரகடனம்
ஆனால் நிலைமை மோசமாவதை விரும்பாத எம்ஜிஆர்,, விகடன் பாலசுப்பிரமணியனை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவரது இந்த முழக்கத்தை இன்றளவும் பல்வேறு சூழ்நிலைகளில் சபாநாயகர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். பல்வேறு சட்டசபை வழக்குகளில் பி.எச். பாண்டியன் தொடர்பான இந்த விவகாரமும் முக்கிய இடம் பிடிக்கிறது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications