சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்த பி.எச். பாண்டியன்
Recommended Video
சென்னை: சட்டசபை சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது என பிரகடனம் செய்து வரலாற்றில் நீங்கா இடம்பெற்றவர் மறைந்த முன்னாள் தமிழக சபாநாயகர் பி.எச். பாண்டியன்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பி.எச். பாண்டியன். எம்ஜிஆர். ஜெயலலிதா, ஓபிஎஸ் காலங்களில் அதிமுகவின் முன்னணி தலைவராக விளங்கியவர்.
1960களின் இறுதியில் வழக்கறிஞராக பணியை தொடங்கினார். அப்போது தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது ஆளவந்தார் கொலை வழக்கு. இக்கொலை வழக்கை நடத்திய அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜே.எஸ்.அதனேஷியஸிடம் ஜூனியராக பணியில் சேர்ந்தார் பி.எச். பாண்டியன். பின்னர் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர்களாக இருந்த .ஆர்.கோகுலகிருஷ்ணன், வி.ராமசாமி ஆகியோரிடமும் ஜூனியராக பணியாற்றியவர் பி.எச் பாண்டியன்.

சபாநாயகராக பாண்டியன்
பின்னர் எம்.ஜி.ஆர் .அதிமுகவை தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்தார். 1977, 1980, 1984-ம் ஆண்டு தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானார். 1985-ம் ஆண்டு தமிழக சட்டசபையின் சபாநாயகராக பி.எச். பாண்டியன் நியமிக்கப்பட்டார்.

விகடன் கார்ட்டூன் விவகாரம்
1987-ல் ஆனந்த விகடன் அட்டையில் சட்டசபையை விமர்சிக்கும் வகையில் அட்டைப்பட கார்ட்டூன் இடம்பெற்றிருந்தது. இதனை கண்டித்து விகடன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு சம்மன் அனுப்பினார் சபாநாயகர் பி.எச். பாண்டியன்.

பி.எச்.பாண்டியன் உத்தரவு
இதனடிப்படையில் சட்டசபைக்கு வரவழைக்கப்பட்ட பாலசுப்பிரமணியனை கூண்டில் ஏற்றிய பி.எச். பாண்டியன், அவரை மன்னிப்பு கேட்க உத்தரவிட்டார். இதற்கு பாலசுப்பிரமணியன் மறுக்க அவரை 3 மாதம் சிறையில் அடைக்க பி.எச். பாண்டியன் உத்தரவிட்டார்.

சபாநாயகருக்கு வானளாவிய அதிகாரம்
இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பான தலைப்புச் செய்தியானது. பி.எச். பாண்டியனின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் தமக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுப்பிய சம்மனை பெற முடியாது என்றார் பி.எச். பாண்டியன். அப்போதுதான், தாம் சட்டசபைக்கு சபாநாயகர்; நீதிமன்றத்தை விட வானளாவிய அதிகாரம் தமக்கு இருக்கிறது என பிரகடனம் செய்தார் பி.எச் பாண்டியன்.

இன்றும் பிஎச் பாண்டியன் பிரகடனம்
ஆனால் நிலைமை மோசமாவதை விரும்பாத எம்ஜிஆர்,, விகடன் பாலசுப்பிரமணியனை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார். அவரது இந்த முழக்கத்தை இன்றளவும் பல்வேறு சூழ்நிலைகளில் சபாநாயகர்கள் பின்பற்றவும் செய்கின்றனர். பல்வேறு சட்டசபை வழக்குகளில் பி.எச். பாண்டியன் தொடர்பான இந்த விவகாரமும் முக்கிய இடம் பிடிக்கிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications