Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காரணமே வேற.. “நாய் 4 நாள் கழிச்சு குலைக்குது!” அதிமுக-பாஜக மோதல் ஏன்? ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி பரபர

Subscribe to Oneindia Tamil

சென்னை: அறிஞர் அண்ணா குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது தவறான தகவல் என்றும், ஆனால் அதற்காக பாஜகவுடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டணியை முறிக்கவில்லை என ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் அவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். சட்டப்போராட்டம் ஒரு பக்கமும், மக்களை சந்திக்கும் புரட்சிப் பயணம் தொடரும். கூட்டணி குறித்து தேர்தல் சமயத்தில் முடிவெடுப்போம். ஏற்கனவே எடுத்த முடிவின் பாதையில் செல்கிறோம்.

Panruti Ramachandran said the different reason for ADMK - BJP alliance broken

பாரதிய ஜனதா கட்சி என்ன செய்யப்போகிறார்கள் எங்களுக்கு தெரியாது. அவர்கள் செல்லும் போக்கை பொருத்து முடிவுகளை எடுக்கப்போகிறோம்." என்றார். அப்போது அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து முன்வைத்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்த பண்ருட்டி ராமசந்திரன், "அண்ணாமலை, அண்ணாவையும் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்தார். என்ன விமர்சனம் செய்தார்? அறிஞர் அண்ணா அவர்கள் 1956 ல் மதுரையில் பி.டி. ராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பகுத்தறிவை பேசினார். அடுத்தநாள் முத்துராமலிங்க தேவர் அவர்கள் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி அண்ணாவை மறுதலித்து பேசினார்.

அடுத்த மதுரை தமுக்கம் மைதானத்திலே அண்ணாவின் பொதுக்கூட்டம். அதில் முத்துராமலிங்க தேவரை தாக்குவார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், ஒரு மணி நேர உரையில் முத்துராமலிங்க தேவரை பற்றி அண்ணா பேசவே இல்லை. ஏனென்றால் பகையை வளர்க்க அறிஞர் அண்ணா விரும்பியதே இல்லை. ஆகவே, இதுதான் நடந்தது.

Panruti Ramachandran said the different reason for ADMK - BJP alliance broken

மறைந்த தலைவர்கள் பற்றி சொல்லும்போது சரியான தகவலை சொல்ல வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொன்ன தகவல் தவறானது. ஆனால், அதை உள்நோக்கத்தோடு சொன்னார் என்று சொல்ல நான் தயாரில்லை. இப்போது ஏற்பட்ட பிரச்சனை அறிஞர் அண்ணா அவர்களால் வந்தது அல்ல.

அண்ணா அவர்களை பற்றி விமர்சித்து 4 நாள் கழித்து பிரச்சனையை கிளப்புகிறார்கள். திருட்டு போய் 4 நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்ற நாயை வைத்துக்கொள்ள முடியுமா? என்ன விசயம் நடந்தது என்றால், அண்ணா அவர்களை பற்றி பேசிய பிறகு அண்ணாமலை வேறொரு தகவலை சொன்னார். 2026 தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாங்கள் பி டீம் அல்ல. சீ டீம் அல்ல. நாங்களே வருவோம். என்றார். அதுதான் பிரச்சனை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+