கொரோனாவால் பெற்றோரை பறிகொடுத்த 32 வயது குழந்தை... சூன்யமான எதிர்காலம்
சென்னை: கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக பெற்றோர் உயிரிழந்துவிட்ட நிலையில், 32 வயதான மன வளர்ச்சி குன்றிய இளைஞர் நிர்கதியாக நிற்கிறார்.
இவரை ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்து விட உதவும் கரங்கள் (ஹெல்பிங் ஹேண்ட்) என்ற தன்னார்வ தொண்டு அமைப்பினர் முன் வந்துள்ளனர்.
மனவளர்ச்சிக் குன்றிய மணி தனது பெற்றோர் இறந்துபோனதை கூட உணரமுடியாத நிலையில் உள்ளவர்.

கொரோனா தொற்று
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கே.வி.பி.கார்டனில் அருணாச்சலம்-கீதா தம்பதியினர் தங்களது மகன் மணியுடன் (மன வளர்ச்சிக் குன்றிய இளைஞர்) வசித்து வந்தனர். அருணாச்சலம் பார்வையற்றோர் முற்போக்கு சங்க மாநில தலைவராக இருந்ததால் இந்த கொரோனா காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்து பார்வையற்றோருக்காக ஏராளமான கொரோனா நிவாரண உதவிகளை செய்து வந்துள்ளார். அவர் அப்படி சென்ற இடங்களில் ஏதோ ஒரு இடத்தில் கொரோனா தொற்றிக்கொண்டதால் அவர் மூலம் மனைவி கீதா, மகன் மணிக்கும் அது தொற்றியது.

சிகிச்சை பலனில்லை
இதையடுத்து அருணாச்சலம், கீதா, மணி, ஆகிய மூவரும் கொரோனா சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாச்சலமும், அவரது மனைவி கீதாவும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தற்போது மணி மட்டும் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு இரண்டாம் கட்டமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் ஆக உள்ளார்.

காலத்தின் கோலம்
இந்நிலையில் இனிமேற்கொண்டு மனவளர்ச்சி குன்றிய மணியை பார்த்துக்கொள்ள யாரும் இல்லாத சூழலில், இது தொடர்பாக பேசுவதற்கு அருணாச்சலத்தின் நண்பரும், ஹெல்பிங் ஹேண்ட் அமைப்பின் நிறுவனருமான தினேஷிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது,'' மணியை பொறுத்தவரை 32 வயது குழந்தை என்று தான் சொல்ல வேண்டும். அவருக்கு அவரது தாய், தந்தை மரணம் அடைந்தது கூட தெரியாது, உணர முடியாது. இப்படிப்பட்ட சூழலில் அவரின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு அவரை ஏதாவது ஒரு விடுதியில் சேர்த்து விட முடிவெடுத்துள்ளோம்.''

இன்னும் ஓரிரு நாட்களில்
''மணிக்கு கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவரை டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளார்கள். கொரோனா கொடூரம் இந்தளவிற்கு ஒருவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டுள்ளது'' என வேதனையுடன் தனது கருத்தை பகிர்ந்துகொண்டார். உதவி செய்ய போய் உயிரிழந்த பெற்றோரது ஆசியும், வாழ்த்தும் மணியை பாதுகாக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications