கைவிட்ட மகன்.. எழுதி வைத்த சொத்தை பெற்றோரே ரத்து செய்யலாம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: வயதான காலத்தில் கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது.
இந்தியாவின் பல்வேறு இடங்களில் பெற்றோர்களை சிலர் இறுதி காலத்தில் பராமரிப்பது இல்லை. சில நபர்கள் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு பெற்றோர்களை வீட்டை விட்டு அனுப்பி விடுவார்கள். சிலர் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்நிலையில் தான் சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு வயதான காலத்தில் பெற்றோரே கவனிக்காத நபர்களை எச்சரிக்கை வகையில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

சென்னை தம்பதி
சென்னையை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி. இவர் தனது சொத்துகளை மூத்த மகனின் பெயருக்கு எழுதி வைத்தார். இந்நிலையில் ஓய்வு விமானப்படை அதிகாரி, தனது மனைவி ஆகியோரை அவரது மூத்த மகன் கவனிப்பது இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் முதிய தம்பதி சிரமத்தை சந்தித்தனர்.

கீழமை நீதிமன்றம் தள்ளுபடி
வயதான காலத்தில் மருத்துவ செலவுக்கும் பிறரை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தான் அந்த தம்பதி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். வயதான காலத்தில் தங்களை கவனிக்காத நிலையில் மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமல் இருப்பதால் மகனுக்கு சொத்து எழுதி வைத்ததை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தனர். இந்த வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்றம் விசாரணை
இதையடுத்து அந்த தம்பதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார். அப்போது நீதிபதி, ‛‛நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு இதயமற்றது'' என அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

அதிரடி உத்தரவு
மேலும், 'தந்தை மகற்காற்றும் உதவி' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொது பண்புகளை இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது சமூகம் இந்த மதிப்பின் முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்தார்.
மேலும் கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவு பிறப்பித்தார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications