போராட்டத்தின்போது விஷம் குடித்த ஆசிரியர் பலி! பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி!
சென்னை: பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடந்த போராட்டத்தின்போது விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் நடைபெற்ற பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தின் போது விஷம் குடித்த பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் பலியானார்.
பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திமுக ஆட்சிக்கு வந்தால், இதனை நிறைவேற்றித் தருவதாக கடந்த சட்டப் பேரவை தேர்தலின் போது அறிவித்த திமுக, அதனை தனது தேர்தல் அறிக்கையில் 181-வது வாக்குறுதியாகவும் அளித்திருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த நான்கரை ஆண்டுகளாகியும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றாததால், பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னையில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், தொடக்க கல்வித்துறை இயக்குநர் நரேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தீர்வு எட்டப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார். பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு மாதாந்திர ஊதியம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து 2500 ரூபாய் உயர்த்தி ரூ. 12,500 வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ரூ. 2500 உயர்த்தி ரூ.15 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
முன்னதாக, சென்னையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் வானகரத்தில் உள்ள திருமண அரங்கத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், அடக்குமுறைகளைக் கண்டித்தும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் கண்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார்.
ஆசிரியர் கண்ணன் உயிரிழந்துள்ளது பகுதி நேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நேற்கொண்டு வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இன்று ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications