தமிழ்நாட்டில் இருக்கும் எம்பிக்களில் அதிக கேஸ் ’இவர்’ மீது தான்! இந்த கட்சி மீது இத்தனை கேஸா? ஷாக்.!
சென்னை: பதினெட்டாவது மக்களவைக்கான தேர்தல் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் எம்பிக்கள் தற்போது நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரமாணபத்திர தாக்கல் படி தமிழகத்தில் அதிக குற்ற வழக்குகளை கொண்ட கட்சிகள் மற்றும் எம்பிக்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..
தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி நிலவிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது

இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை ஸ்வீப் செய்திருக்கும் நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். இருந்த போதும் எந்த கட்சியுமே மக்கள் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப முடியவில்லை. இதற்கிடையே தேர்தலில் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது நாடாளுமன்றத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளர்கள் தங்கள் மீதுள்ள குற்ற வழக்குகள் குறித்து பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தனர். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் எம்பிக்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படி பார்க்கும் போது, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் 100% வெற்றியை பதிவு செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கும் மக்களவை உறுப்பினர்களில் 40 பேரில் 26 பேர் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதாவது சுமார் 65 சதவீத தமிழகத்தைச் சேர்ந்த எம்பிக்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இந்தப் பட்டியலில் தேனி திமுக மாவட்ட செயலாளர் எம்பியுமான தங்க தமிழ்ச்செல்வன் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் மீது 17 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல சிவகங்கை எம்பியும் காங்கிரஸ் பிரமுகருமான கார்த்தி சிதம்பரம் மீது, 10 குற்ற வழக்குகளும் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளரும் எம்பியும் ஆன சச்சிதானந்தம் மீது ஒன்பது குற்ற வழக்குகளும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி எம் பி எம் காங்கிரஸ் பிரமுகருமான விஜய் வசந்த் மீது எட்டு குற்ற வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன.
அரசியல் கட்சிகள் என்று பார்க்கும்போது அதிகபட்சமாக 125 குற்ற வழக்குகளோடு பாரதிய ஜனதா கட்சி முதல் இடத்தில் இருக்கிறது. 50 வழக்குகளுடன் திமுக இரண்டாவது இடத்திலும், 32 வழக்குகளுடன் காங்கிரஸ் மூன்றாவது இடத்திலும், 23 வழக்குகளுடன் அதிமுக நான்காவது இடத்திலும், 20 வழக்குகளுடன் பாட்டாளி மக்கள் கட்சி ஐந்தாவது இடத்திலும் இருக்கின்றன.
-
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
பொருளாக தராமல் ரூ.8,000 கூப்பன் கொடுப்பது ஏன்? மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் சொன்ன விளக்கம்! -
திமுக vs அதிமுக! கேம் சேஞ்சராக போகும் டாப் 5 வாக்குறுதிகள்! தேர்தல் முடிவையே மாற்றும் பிரம்மாஸ்திரம் -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
பஞ்சாயத்து.. பிரசாரம்.. அனல் பறக்கும் 'கேப்டன்' கோட்டை! பிரேமலதா முடிவால் அப்செட்டில் உடன்பிறப்புகள்












Click it and Unblock the Notifications